பக்கம் எண் :


581


     மென்றோள்: குறுந். 90:7, 268:6.

     தோளை அணைதல்: குறுந். 193:5, ஒப்பு.

     5-6. தோள் மெலிதல்: குறுந். 87:5, ஒப்பு.

     7. பிழையா வஞ்சினம்: குறுந். 36:5; அகநா. 267:2, 378:18.

     8. தலைவனைக் கள்வனென்றல்: குறுந். 25:1, ஒப்பு; குறள். 1258;கம்ப. மிதிலைக். 55. கடவன்- புறநா. 106:5.

     7-8. தலைவன் வஞ்சினம் பொய்த்தல்: குறுந். 25:1-2, ஒப்பு.

     6-8. தலைவன் தலைவியின் தோளை அணைந்தபோது வஞ்சினம்கூறுதல்: குறுந். 36:4-5.

(318)
  
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவிவேறுபட்டாளாக, "நீ ஆற்ற வேண்டும்’’ என்று வற்புறுத்திய தோழியைநோக்கி, "நான் எங்ஙனம் ஆற்றுவேன்? என் உயிர் நில்லாது போலும்"என்று தலைவி கூறியது.)
 319.    
மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து  
    
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்  
    
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி  
    
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்  
5
மாலை வந்தன்று மாரி மாமழை  
    
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்  
    
இன்னும் வாரா ராயின்  
    
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே.  

என்பது பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை (பி-ம்.வன்பொறை) யெதிரழிந்து சொற்றது.

     (வன்புறை - தோழி வற்புறுத்தல்.)

தாயங்கண்ணன்.

     (பி-ம்.) 3. ‘பொருந்திய’ 5. ‘மாழைப்’ 6. ‘நன்னிறஞ்’.

     (ப-ரை.) தோழி--, மான் ஏறு - ஆண்மான்கள், மடம்பிணை தழீஇ - மடப்பம் பொருந்திய பெண்மான்களைத்தழுவி, மருள் கூர்ந்து - மயக்கம் மிக்கு, கானம் நண்ணிய - காட்டினிடத்துப் பொருந்திய, புதல் மறைந்து ஒடுங்கவும் - புதலின் கண்ணே மறைந்து ஒடுங்கியிருக்கும்படியும், கைஉடை நல்மா - துதிக்கையையுடைய நல்ல ஆண்யானைகள்,பிடியொடு பொருந்தி - பெண் யானைகளோடு சேர்ந்து,மை அணி மருங்கின் மலையகம் சேரவும் - மேகங்களைஅணிந்த பக்கத்தையுடைய மலையிடத்தை அடையும்