பக்கம் எண் :


612


     கெழுவென்பது கேழென நீண்டது (தொல். குற்றியலுகரப். 76, ந.)புலம்பு அசா - புலம்பையும் அசாவையு மென்பதும் பொருந்தும்.

    ஒப்புமைப் பகுதி 1. திரிமருப்பிரலை: குறுந். 183:3-4; அகநா. 4:3-4, 34:4; பு. வெ. 277. திரிமருப்பு: குறுந். 279:1.

    1-2. இரலை பிணையோடு இருத்தல்: குறுந். 65:1-2, ஒப்பு.

    3. விலங்குகள் மலர் நிறைந்த இடத்திற் படுத்திருத்தல்: “நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்” (அகநா. 2:7.)

    5. தண்பனி யச்சிரம்: குறுந். 68:3, 76:6, 82:6.

    6. பெருவிறல்: குறிஞ்சிப். 199; மலைபடு. 493; கலி. 81:9.

    8. அசாவிட: கலி. 132:3; அகநா. 162:16.

(338)
  
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வருந்தியதலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவிய காலத்தில்அவ்வொழுக்கம் நினக்கு இனிதாயிருந்தது; இப்பொழுது வருந்துதல்எவன்?” என்று தோழி கூறியது.)
 339.   
நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை 
    
உறையறு மையிற் போகிச் சாரற் 
    
குறவர் பாக்கத் திழிதரு நாடன் 
    
மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல் 
5
இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க் 
    
குவளை யுண்கண் கலுழப் 
    
பசலை யாகா வூங்கலங் கடையே. 

என்பது வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொற் சொல்லிவற்புறீஇயது

பேயார்.

     (பி-ம்.) 1. ‘னறும்புகை’ 2. ‘உறையுறு மகளிர் மையிற்’ 5. ‘நறுவிதழ்க்’, ‘நறுமாயிதழ்க்’.

    (ப-ரை.) தோழி--, நறை அகில் - வாசனையையுடையஅகிலினது, வயங்கிய நளி புனம் நறுபுகை - விளங்கியசெறிந்த புனத்தின்கண் எழுந்த நறிய புகையானது, உறைஅறுமையின் போகி - துளிகள் அற்ற வெண்மேகத்தைப்போலச் சென்று, சாரல் குறவர் பாக்கத்து - மலைச்சாரலிலுள்ளகுறவர்களுடைய ஊரில், இழி தரும் நாடன் - இறங்கும்நாட்டையுடைய தலைவன், மயங்கு மலர் கோதை - பலவகை மலர்கள் கலந்த மாலையையணிந்த, நல் மார்புமுயங்கல் - நின் நல்ல மார்பைத் தழுவுதல், மா இதழ் -