மிளைகிழான் நல்வேட்டன். (பி-ம்.) 1. ‘பல்லி பயந்த’, ‘பல்லி படீஇய’, ‘பல்லி படரிய’ 5. ‘கண்ணிய லாண்மை’ 6. ‘வலிய’.
(ப-ரை.) தோழி--, பல் வீ பட்ட பசு நனை குரவம் - பல மலர்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம், பொரி பூ புன்கொடு - நெற்பொரியைப் போன்றபூக்களையுடைய புன்க மரத்தோடு, பொழில் அணிக்கொளாஅ - சோலையின் கண் அழகைக் கொண்டு, சினைஇனிது ஆகிய - கிளை கண்ணுக்கு இனிதாகத் தோற்றிய,காலையும் - இப்பருவத்திலும், காதலர் பேணார் ஆயினும் -தலைவர் நம்மை விரும்பிப் பாதுகாவாராயினும், பெரியோர்நெஞ்சத்து கண்ணிய ஆண்மை கடவது அன்று என - பெரியோர்கள் தம் நெஞ்சத்திலே நினைத்த மேற்கோள் செலுத்தப்படுவதன் றென்றெண்ணி, வலியாநெஞ்சம் - முன்னர்த்