பக்கம் எண் :


630


    ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழிதோழி: குறுந். 77:1, ஒப்பு.

    வாழிதோழி: குறுந். 260:4, ஒப்பு.

    2. செல்லாதீம்: குறுந். 390:2; நற். 229:3; ஐங். 186:5; அகநா. 300:18. 5. நெடுங்காற் கணந்துள்: நற். 212:2.

     கணந்துட்பறவை: சிலப். 10:117, அடியார்.

    7. "கல்லுடை யதர, கான நீந்தி" (அகநா. 295:8.)

    8. பொருட்பிணி: குறுந். 255:7, ஒப்பு, 344:7, ஒப்பு.

     நிலையாப் பொருட்பிணி: நற். 46:11, 71:1, 126:11, 241:12;கலி. 8:11, 14, 17; அகநா. 79:17.

(350)
  
(தலைமகன்தமர் தலைவியை மணம்பேசுதற் பொருட்டு வந்தாராக,"அவருக்கு நமர் உடம்படுவார்கொல்லோ?" என்று ஐயுற்ற தலைவியைநோக்கி, "நமர் உடம்பட்டனர்" என்று தோழி கூறியது.)
 351.   
வளையோ யுவந்திசின் விரைவுறு கொடுந்தாள்  
    
அளைவா ழலவன் கூருகிர் வரித்த 
    
ஈர்மணன் மலிர்நெறி சிதைய விழுமென 
    
உருமிசைப் புணரி யுடைதருந் துறைவர்க் 
    
குரிமை செப்பினர் நமரே விரியலர்ப் 
5
புன்னை யோங்கிய புலாலஞ் சேரி 
    
இன்னகை யாயத் தாரோ 
    
டின்னுமற் றோவிவ் வழுங்க லூரே. 

என்பது தலைமகன்தமர் வரைவொடு வந்தவழி, "நமர் அவர்க்கு வரைவுநேரார் கொல்லா?" என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது.

அம்மூவன்.

     (பி-ம்.) 1. ‘வளையோய் வந்திசின்’, ‘விரவுங் கொடுந்தாள்’ 3. ‘ஈர்மண லீர்நெறி’ 4-5. ‘துறைவற்குரிய’ 6-7. ‘சேரியினகை யாய்த்தாயத்தாரே’.

    (ப-ரை.) வளையோய் - வளையை அணிந்தோய்,நமர் - நம் சுற்றத்தார், விரைவு உறு கொடு தாள் அளைவாழ் அலவன் - விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு, கூர்உகிர் வரித்த - தன் கூரிய நகத்தினால் கீறிய, ஈர் மணல் மலிர்நெறி சிதைய - ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி,இழுமென - இழுமென்னும் ஓசையுண்டாக, உரும் இசைபுணரி உடைதரும் துறைவர்க்கு - இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு,