உறையூர் முதுகூற்றன். (பி-ம்.) 4. ‘நிறையிதழ்‘
(ப-ரை.) பகல் - பகற் காலத்தில், கோடு உயர் நெடு வரை கவான் - கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலையினதுதாழ்வரையினிடத்தே, பாடு இன் அருவி - ஓசை இனிதாகியஅருவியில், ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக - நிறைந்தமுழக்கத்தையுடைய மலையையுடைய தலைவனது மார்புதெப்பமாக, ஆடுதல் இனிது - நீர்விளையாடல் இனிய,இரவில் - இராக்காலத்தில், பஞ்சி வெள் திரி செ சுடர் நல்இல் - பஞ்சாலாகிய வெள்ளிய திரியையுடைய செவ்வியவிளக்கையுடைய நல்ல வீட்டின் கண்ணே, அன்னை - நம் தாய், பின்னு வீழ் சிறு புறம் தழீஇ - பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி, முயங்க - அணைப்ப, நிரை