தலைவன் வாராமை நமக்குத் துன்பத்தை இன்று தருவதாயினும், பின்நலம்பயக்கும்” என்று தலைவி கூறினாள்.
தில்ல: விழைவின்கண் வந்த தில்லென்னும் இடைச்சொல் ஈறு திரிந்தது.
சிலம்பிற்சிலம்பும் - மலைப்பக்கங்களில் எதிரொலியுண்டாக்குமெனினும் அமையும்.
மேற்கோளாட்சி 1. ‘மங்குல்ஞாயிறு - இருளைக் கெடுக்கும் ஞாயிறு; இதனை, நோய்மருந்தென்றாற் போலக் கொள்க’ (பரி. 13:1, பரிமேல்).
ஒப்புமைப் பகுதி 1-2. வேலன் நோய் மருந்து அறியாமை: “தோற்றமல்லதுநோய்க்குமருந் தாகா, வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி” (குறுந். 263:3-4); “அறியா வேலற் றரீஇ யன்னை, வெறியயர் வியன்களம்பொலிய வேத்தி” (அகநா. 242:10-11).
3. அரும்படர்: அகநா. 72:21.
4. வாரற்க தில்ல: குறுந். 198:8. ஒப்பு.
3-4. தலைவி வருந்தினாலும் தலைவன் வாராமை நன்று: “ஆய்மலர் மழைக்கண் டெண்பனி யுறைப்பவும் வேய்மருள் பணைத்தோள் விறலிழை நெகிழவும், அம்பன் மூதூ ரரவ மாயினும் .... வாரற்க தில்ல தோழி .... ஓங்குமலை நாடனின் னசையி னானே”, “மென்றோணெகிழ்ந்துநாம் வருந்தினு மின்றவர், வாரா ராயினோ நன்றுமற் றில்லை” (நற். 85:1-11, 255:6-7).
5. தினைக்கதிர்க்குப் பிடியின் கை: குறுந். 198:3-4, ஒப்பு.
5-6. தினையைக் கிளி உண்ணுதல்: குறுந். 133: 1-2.
தினையிற் கிளி கடிதல்: குறுந். 198: 4-5, ஒப்பு.
தலைவி குளிராற் கிளி கடிதல்: குறுந். 291:1-2, ஒப்பு.
(360)
(வரைவுக்குரிய முயற்சிகள் நிகழாநிற்ப, “இதுகாறும் நீ தலைவன் பிரிவை நன்கு ஆற்றினை” என்று கூறிப் பாராட்டிய தோழியை நோக்கி,“அவர் மலையிலிருந்து வந்த காந்தளை வளர்த்து ஆற்றினேன்” என்று தலைவி கூறியது.) 361. | அம்ம வாழி தோழி யன்னைக் |
| குயர்நிலை யுலகமுஞ் சிறிதா லவர்மலை |
| மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு |
| காலை வந்த காந்தண் முழுமுதல் |
5 | மெல்லிலை குழைய முயங்கலும் |
| இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே. |
என்பது வரைவுமலிந்தவழித் தோழி “நன்காற்றினாய்” என்றாட்குக்கிழத்தி சொல்லியது.