பக்கம் எண் :


661


     வில்லைப் பிடித்த விரல்கள் ஒன்றோடொன்று மிகச் செறிந்திருக்கும்; அதனைக் கூறியது கவவுக்கை நெகிழாமல் அணைந்து நிற்றலை உணர்த்தியது;

  
“வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற் 
  
 பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்று”     (சீவக. 2110) 

என்று இவ்வுவமையைத் திருத்தக்கதேவரும் எடுத்தாண்டனர்.

    ஏகாரங்கள்: அசை நிலை.

    செறிவுக்கு வில்லகவிரலைக் கூறினமையின் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் வில்லக விரலினார் என்னும் பெயர் பெற்றார்.

     (மேற்கோளாட்சி) 4. வில்லகவிரலென்பது வந்தது (சீவக. 2110, ந.)

    4-5. வினைக்குறிப்பு ஆக்கம் விரிந்தல்லது பொருளுணர்த்தாது (தொல். எச்ச. 36, ந.)

     ஒப்புமைப் பகுதி 1-2. வண்டு வாய்திறக்கப் போது மலர்தல்: குறுந். 265: 1-5, ஒப்பு.

(370)
  
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வேறுபட்டதலைவியை நோக்கி, “நீ வேறுபடாமல் ஆற்றல்வேண்டும்” என்றதோழிக்கு, “யான் என்செய்கேன்! யான் ஆற்றியிருப்பினும் காமம்பெரிதாகலின் என் வரைத்தன்றி வேறுபாடு உண்டாயது” என்று தலைவிகூறியது.)
 371.    
கவளை நெகிழ்தலு மெய்பசப் பூர்தலும்  
    
மைபடு சிலம்பி னைவனம் வித்தி 
    
அருவியின் விளைக்கு நாடனொடு 
    
மருவேன் றோழியது காமமோ பெரிதே. 

என்பது வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

உறையூர் முதுகூற்றன்.

    (ப-ரை.) தோழி--, மை படு சிலம்பின் - மேகங்கள் பொருந்துகின்ற மலைப்பக்கத்தில், ஐவனம் வித்தி - மலைநெல்லை விதைத்து, அருவியின் விளைக்கும் நாடனொடு - அருவியினாலே விளைக்கின்ற நாட்டையுடைய தலைவனால், கைவளை நெகிழ்தலும் - என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்தலையும், மெய் பசப்பு ஊர்தலும் - மெய்யின்கண்ணே பசலை பரத்தலையும், மருவேன் - பெறேன்;ஆயினும், அது காமம் - அக்காமம், பெரிது--,