பக்கம் எண் :


665


     (கருத்து) தலைவனோடு அமைந்த தொடர்பு என்றும் கெடாதது.

     (வி-ரை.) எல்லை - வரம்பு; முடிவுமாம். வெவ்வாய் - அலர் கூறுதலால் வெம்மையையுடைய வாய்; அவர் கூறும் அலர் நெஞ்சைச் சுடுவதாதலின் இங்ஙனம் கூறினாள். ‘உலகு பிறழ்ந்தாலும் ஊழ்வசத்தால் அமைந்த தொடர்பு கெடாது’ என்றாள். உடைத்தோ: ஓ அசை நிலை. தொடுபு: எச்சத்திரிபு; தொடவென்னும் பொருட்டு.

    ஒற்றுமையால், நந்தொடர்பெனக் கூறினாள்.

     ஒப்புமைப் பகுதி 1. நிலம் புடை பெயர்தல்: “பெருநிலங் கிளரினும்”,“நிலம்புடை பெயர்வ தாயினும்” (நற். 201:10, 289:2); “நிலந்திறம்பெயருங் காலை யாயினும்” (பதிற். 63:6); “நிலம்புடை பெயர்வதாயினும்” (புறநா. 34:5); “இருநிலம் பெயரினு மெம்மாட்டில”(பெருங். 1.58:92).

     2. கடற்கு முடிவு தோன்றுதல்: “அறந்திருந் துன்னருளும் பிறி தாயி னருமறையின், திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே” (திருச்சிற். 213).

     3. வெவ்வாய்ப்பெண்டிர் கௌவை; “வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்” (அகநா. 50:3.)

     5. கருவிரலையுடைய ஊகம்: “கருவிரன் மந்தி” (மலைபடு. 311; ஐங். 272:1, 280:1).

     4-5. ஊகத்தின் மயிர்: (குறுந். 90:3-4); “குருமயிர்க் கடுவன்” (ஐங். 275:1). பூநாறு பலவுக்கனி: குறுந். 90:4.

     5-6. பலாப்பழத்தைக் குரங்கு தோண்டுதல்: குறுந். 342:1, ஒப்பு.

     7. காந்தளஞ் சிறுகுடி: அகநா. 315:5. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.

    மு. குறுந். 170.

(373)
  
(தலைவன் வரைவொடு புக்க காலத்துத் தமர் அவனை ஏற்றுக் கொண்டாராக, “யான் அறத்தொடு நிற்றலின் இது நிகழ்ந்தது” என்று தோழி தலைவிக்குக் கூறியது).
 374.    
எந்தையும் யாயு முணரக் காட்டி  
    
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் 
    
மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப 
    
நன்றுபுரி கொள்கையி னொன்றா கின்றே 
5
முடங்க லிறைய தூங்கணங் குரீஇ 
    
நீடிரும் பெண்ணைத் தொடுத்த 
    
கூடினு மயங்கிய மைய லூரே. 

என்பது அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.