தோன்றுதற்குரிய, பனி கடுநாள் - கடிய பனிப்பருவத்தில்,யாங்கு செய்வாம் - என்ன செய்வாம்!
(முடிபு) தோழி, வானம் பெயல் ஆனாது; காதலர் நனி சேய் நாட்டர்; நம் முன்னலர்; பனிக்கடு நாளில் யாங்குச் செய்வோம்!
(கருத்து) தலைவர் தாம் குறித்த பருவத்தே வாராராயின் என் செய்வேம்!
(வி-ரை.) கொல்: அசை நிலை. “ஈங்கைமலர் இப்பொழுது உதிரா நிற்ப, இனிப்பனிக்கடுநாள் தோன்றும்” என்றாள். ஈங்கை கூதிர்க்காலத்தில் மலர்ந்து உதிரும் இயல்புடையது (குறுந். 110)
பனிநாள், கடுநாளென்க.
ஒப்புமைப் பகுதி 2. வென்றெறி முரசு: புறநா. 112:4, 351:5.
1-3. மேகமுழக்கத்திற்கு முரசின் ஒலி: குறுந். 270:3, ஒப்பு: அகநா. 175:12-3.
மழையால் விசும்பு மறைதல்: குறுந். 355:1, ஒப்பு.; நற். 347:1-2. 4. நனிசேய் நாட்டர்: குறுந். 228:5; நற். 115:8. 5. யாங்குச் செய்வாம்:குறுந். 217:3, ஒப்பு..
5-6. ஈங்கைய வண்ணத் துய்ம்மலர்: குறுந். 110:5-6. ஈங்கையின்மலர் துய்யையுடையது: குறுந். 110:5-6, ஒப்பு.ஈங்கைமலர் கூதிர்பபருவத்தில் உதிர்தல்: குறுந். 110:5-7, ஒப்பு.
(380)
(வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவியதன்பயன் இங்ஙனம் வருந்தியிருத்தல் கொல்?” என்றுதோழி கூறியது.) 381. | தொல்கவின் றொலைந்து தோணலஞ் சாஅய் |
| அல்ல னெஞ்சமோ டல்கலுந் துஞ்சாது |
| பசலை யாகி விளிவது கொல்லோ |
| வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற் |
5 | பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி |
| விலங்குதிரை யுடைதருந் துறைவனொ |
| டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே. |
என்பது வரைவிடை ஆற்றாளாகிய (பி-ம். ஆற்றாளாய்த்) தலைமகளை ஆற்றுவிக்கந்லுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது.
(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.) (பி-ம்.) 3. ‘பகலையாகிய’; 5. ‘நன்மலர’்; 7. ‘னக்கதன’்.
(ப-ரை.) வெள் குருகு - வெள்ளை நாரைகள், நரலும் -ஒலிக்கின்ற, தண் கமழ் கானல் - தண்ணியதாகக் கமழ்கின்றகடற்கரையிலேயுள்ள, பூ மலி பொதும்பர் நாள் மலர் மயக்கி -