குறியிறையார் (பி-ம். குறையிறையார்) (பி-ம்.) 2. ‘யாகத்துக’்; 3. ‘மறுவரவந்தோடி’; 5. ‘வார்தினைப’், அவர் தினைப் புன மேய்ந்தாங்கு. சில பிரதிகளில் நாலாம் அடிக்கு முன் ‘கூரை முற்றுஞ் சார னாடன்’ என்று ஓரடி காணப்படுகின்றது.
(ப-ரை.) முழந்தாள் இரு பிடி - முழந்தாளையுடைய கரிய பிடியினது, கய தலை குழவி - மெல்லிய தலையையுடைய கன்று, நறவு மலி பாக்கத்து - கள் மிக்க மலைப்பக்கத்தூரில், குறமகள் ஈன்ற - குறத்தி பெற்ற, குறி இறைபுதல்வரொடு மறுவந்து ஓடி - குறிய கைச்சந்தையுடைய