கயமன். (பி-ம்.) 3. ‘வுரைத்தனள்’, ‘முறிசினை’; 4. ‘ஓமைக்’, ‘டொருத்தனல்’; 5. ‘வெவ்வறைக்’; 7. ‘செலலே’.
(ப-ரை.) பாலும் உண்ணாள் - பாலையும் உண்ணாளாகி, பந்துடன் மேவாள் - பந்தையும் விரும்பாளாகி, விளையாடு ஆயமொடு அயர்வோள் - முன்னர்த் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இனி - இப்பொழுது, முளிசினை ஓமை குத்திய - உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய, உயர் கோடு ஒருத்தல் - உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை, வேனில் குன்றத்து வெ அரை கவாஅன் - வேனிலின் தன்மையையுடைய மலையினிடத்துள்ள வெம்மையாகிய அடிவாரத்தில், மழை முழங்கு கடு குரல் ஓர்க்கும் - மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கும், கழை திரங்கு அருஇடை - மூங்கில்கள் உலர்ந்த செல்லுதற்கரிய இடத்திலே, அவனொடு செலவு - அத்தலைவனோடு செல்லுதல், எளிது என உணர்ந்தனள் கொல்லோ - எளிமையையுடையதென்று அறிந்தாளோ?
(முடிபு) உண்ணாள், மேவாள், அயர்வோள், இனி அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள்கொல்லோ?
(கருத்து) தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதெனநினைத்தனளோ?
(வி-ரை.) ‘பாலு முண்ணாது தனக்கு இனிய பந்தையும் விரும்பாது ஆயத்தோடு இடைவிடாது விளையாடும் இயல்புடையாள் எங்ஙனம்