பக்கம் எண் :


138


வைகறை, செய்துவிட்டன்ன செந்நில மருங்கிற், செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச், சிறுமறிதழீஇய தெறிநடை மடப்பிணை, வலந்திரி மருப்பினண்ண லிரலையொ, டலங்குசினைக் குருந்தி னல்குநிழல் வதிய", "மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற், றிரிமருப் பிரலை பைம்பவருகள, வார்பெய லுதவிய கார்செய் காலை" (அகநா. 14:1-6, 23:1-9, 34:4-8, 139:5-12, 154:1-9, 304:1-10, 314:5-7); "கருவியல் கார்மழை கால்கலந்தேத்த, உருகு மடமான் பிணையோ டுகளும்" (திணை மொழி. 25); "கார்வளம் பழுனிக் கவினிய கானத்து.... சிறுபிணை தழீஇய திரிமருப்பிரலை" (பெருங். 1. 49:101-14).

    5. வருந்தி நொந்துறைதல்: குறுந். 192:2, 400:7

(65)
  
(கார்காலம் வந்தபின்பும் தலைவன் வாராமையால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்வது; இதைக் கார்காலத்துக்குரியதென்று மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. ஆதலின் இது கார்ப்பருவமென்று நீ வருந்தற்க" என்று தோழி கூறியது.)
 66.   
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை 
    
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய 
    
பருவம் வாரா வளவை நெரிதரத் 
    
கொம்புசேர் கொடியிண ரூழ்ந்த 
5
வம்ப மாரியைக் காரென மதித்தே. 

என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்பறீஇயது.

    (பருவம் - இங்கே கார்காலம். வற்புறீஇயது - வற்புறுத்தியது.)

கோவதத்தன் (பி-ம். கோவத்தன்).

    (பி-ம்.) 1. மடவை; 4. கொடியிணர் பூத்த; 5.வம்பு.

    (ப-ரை.) கல் பிறங்கு அத்தம் சென்றோர் - கற்கள் விளங்கும் பாலைநிலத்து அருவழியைக் கடந்து சென்ற தலைவர், கூறிய - மீண்டு வருவேனென்று சுட்டிக் கூறிய பருவம் - கார்ப்பருவம், வாரா அளவை - வாராத காலத்திலே, வம்ப மாரியை - பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் என கார் என - கார் காலத்து மழையென்று, மதித்து - கருதி, நெரிதர - நெருங்கும்படி, கொம்புசேர் கொடி இணர் ஊழ்த்த - சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துக்களைப் புறப்பட விட்டன; ஆதலின், தடவு நிலை கொன்றை - பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள், மன்ற - நிச்சயமாக, மடவ - பேதைமையையுடைய.