கோவூர் கிழார். (பி-ம்) 1. வன்பாற்; 2. மருவந்து; 3.களிதரு; 4-5.வருந்தி, நோநொந்துறைய விருந்தினரோ; 5.விருந்தீரோ, விருந்தன்றாலெனவே, விருந்தனிரோ.
(ப-ரை.) தோழி, வன் பரல் தெள் அறல் பருகிய - வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த, இரலை - ஆண்மான், தன் இன்புறு துணையொடு - இன்பத்தை நுகர்தற்குரிய தன்னுடைய பெண்மானோடு, மறுவந்து உகள - களிப்பினாற் சுழன்று துள்ளி விறையாடா நிற்கவும், வாராது உறையுநர் - இங்கே வாராமல் சென்ற