அள்ளூர் நன்முல்லை. (பி-ம்) 3.அரும்பனியற்சிரம்.
(ப-ரை.) பூழ் கால் அன்ன - குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற, செ கால் உழுந்தின் - செவ்விய காலையுடைய உழுந்தினது, ஊழ்ப்படு முதுகாய் - மிக முதிர்ந்த காய்களை, உழை இனம் கவரும் - மான்கூட்டங்கள் தின்னும்பொருட்டுக் கொள்ளும், அருபனி - பொறுத்தற்கரிய பனியையுடைய, அச்சிரம் தீர்க்கும் - முன்பனுக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும், மருந்து - பரிகாரம் அவர் மணந்த மார்பே - என்னை மணந்த அவருடைய மார்பேயாகும்; பிறிது இல்லை - வேறு இல்லை.
(முடிபு) அச்சிரந் தீர்க்கும் மருந்து அவர் மணந்த மார்பே; பிறிதில்லை.
(கருத்து) அவர் உடன் இராமையால் இம் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.
(வி-ரை.) உழுந்தின் வேர் சிறிது மேலே தெரிந்த அடிக்குப் பூழ்க்கால் உவமை. அச்சிரம் - முன்பனிக்காலம் (பரி. 18:38; சிலப். 14:105);