(சொ - ள்.) 1-11. இருங் கழி முதலை மேஎம் தோல் அன்ன பெரிய உப்பங்கழியிலுள்ள முதலைபிடத்து பொருந்திய தோலை யொத்த, கருங்கால் ஓமை காண்பு இன் பெருஞ்சினை - கரிய அடியினையுடைய ஓமை மரத்தின் காண்டற்கினிய பெரிய கிளையின், கடியுடை நனந்தலை - காவலையுடைய அகன்ற இடத்தில், ஈன்று இளைப்பட்ட கொடுவாய்ப் பேடைக்கு - ஈன்று காவற்பட்ட வளைந்த வாயினையுடைய தன் பேடைக்கு, அல்கு இரை தரீஇய - மிக்க இரையைக் கொண்ர்ந்து தரும் பொருட்டு, மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை - மயங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த செவியினையுடைய எருவைச் சேவலானது, வான்தோய் சிமைய விறல் வரைக் கவான் - வானை அளாவிய உச்சியினையுடைய சிறப்பு வாய்ந்த மலையின் சாரலில், துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி-அசைந்த நடையையுடைய மரையாவை வலப்பக்கத்தே வீழக்கொன்று வீழ்த்தி, ஒண் செங் குருதி உவறி உண்டு அருந்துபு-அதன் ஒள்யி சிவந்த குருதியை ஊற்றியுண்டு ஆர்ந்து, புலவுப் புலி துறந்த - புலால்நாறும் புலி கைவிட்டுப் போன, கலவுக்கழி கடுமுடை-மூட்டுவாய் கழிந்த மிக்க முடை வீசும் புலாலை, கொள்ளை மாந்தரின் ஆனாது கவரு - கொள்ளை புரியும் மாந்தரைப் போல விடாது கவர்ந்து செல்லும் (இடமாகிய), புல் இலை மராஅத்த அகன்சேண் அத்தம் - புல்லிய இலைகளையுடைய மராமரங்களைக் கொண்ட அகன்ற நெடிய நெறியில்; 12-13. கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின்னின்று துரக்கும் நெஞ்சம் - அணிகலன்களை ஈட்டி வரும் எண்ணத்தாலே கடந்து நெல்வதாகக் காட்டி எம்மைப் பின்னின்று தூண்டும் நெஞ்சமே! 15-18. கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ்வாய் - முருக்கம் பூவினையொத்த காண்டற்கு இனிய சிவந்த வாயினையும், அம் தீம் கிளவி - அழகிய இனிய மொழியினையும், ஆய் இழை - ஆய்ந்த அணியினையுமுடைய, மடந்தை-நம் தலைவியது, கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் - வளைந்த குழையோடு மாறுபட்ட நோக்கமானது, நெடுஞ்சேண் ஆர் இடை விலங்கும் ஞான்று-மிக நீண்ட அரிய சுரத்திடத்தே தோன்றித் தடுக்கும் அன்று; 13-14. நின் வாய் வாய்போற் பொய்ம்மொழி எம் எவ்வம் என் களைமா - நின் வாயினது மெய்போலும் பொய்ம்மொழி எமது துன்பத்தை எங்ஙனம் போக்குவதாகும்? (முடிபு) அகன் சேண் அத்தம் கலம் தரல் உள்ளமொடு பின்னின்று துரக்கும் நெஞ்சமே! ஆயிழை மடந்தை நோக்கம் ஆரிடை விலங்கும் ஞான்று நின் பொய்ம் மொழி எவ்வம் களைமா? |