பக்கம் எண் :

களிற்றியானை நிரை13

4. முல்லை

[தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.]

 முல்லை வைந்நுனை1 தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
5.மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன
2 வாங்குவள் பரியப்
10.பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த
3 மாண்வினைத் தேரன்
உவக்காண்
4 தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
15.நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே.
 

-குறுங்குடி மருதனார்.

(சொ - ள்.) 17. ஆய்தொடி அரிவை - ஆராய்ந்த வளையினையுடைய அரிவையே!’

1-7. முல்லை வை நுனை தோன்ற - முல்லையினது கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்றவும், இல்லமொடு பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ-தேற்றாமரத்தின் முகையொடு பசிய அடியினையுடைய கொன்றைமரத்தின் முகைகள் மெல்லிய கட்டு நெகிழ்ந்து விரியவும், இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பிற் ரல் அவல் அடைய இரலை தெறிப்ப - இரும்பை முறுக்கிவிட்டாற் போலும் கரிய பெரிய கொம்பினையுடைய ஆண் மான்கள் பரல்களையுடைய பள்ளங்களிலெல்லாம் துள்ளிக் குதிக்கவும், மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப - அகன்ற காடுறை யுலகில் நீரில்லாத வருத்தம் விட்டொழியவும், கருவி வானம் கதழ் உறை சிதறி கவின் பெறுகானம் கார்ள செய்தன்று - மின் முதலியவற்றின் தொகுதியையுடைய மேகம்


(பாடம்) 1. வைந்நுதி.

2. நரம்பார்பபன்ன.

3. யாத்த.

4. உதுக்காண்.