தாதுண் என்ற அடையால் பறவை வணடாயிற்று. உவக்கர் - உவ்விடத்தே, உங்கே. ‘உவக்கா ணெங் காதலர்’1 என்புழி, உவக் காண் என்பதற்கு, ‘உங்கே’ எனப் பொருளும், ‘ஒட்டி நின்ற இடைச் சொல்’ என இலக்கணமும் பரிமேலழகர் எழுதினமை காண்க. குன்றம் - சிராப்பள்ளி மலை. (மே - ள்.) செய்யுள் உறுப்பினுள் ஒன்றாகிய, நோக்கு’2 என்பதற்குப் பேராசிரியர் இச் செய்யுளை எடுத்துக் காட்டித் தம் நுண் மாண் நுழை புலந் தோன்றக் கூறியிருக்கும் உரை ஈண்டு அறிந் தின்புறற் பாலது. இனி ‘அடிநிலை காறும்’ என்றதனாற் செய்யுள் முழுவதும் எவ்வகை யுறுப்புங் கூட்டி நோக்கி யுணருமாறுங் கூறுதும்; முல்லை யென்பது முதலாகக் கானம் என்பதீறாக நாற்சொல் லியலான் யாப்பு வழிப்பட்டதாயினும் பருவங் காட்டி வற்புறுக்கும் தோழி பருவந் தொடங்கிய துணையே காண் என்று வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணர வைத்தான்; ‘உவக்காண் தோன்றுங் குறும்பொறை நாடன்’ என்னுந் துணையும் தலைமகனது காதன்மிகுதி கூறி வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணர வைத்தான்; ஒழிந்த அடி நிலைகாறும் பிரிந்த காலம் அணித்தெனக் கூறி வற்புறுத்தினா ளென்பது நோக்கி யுணர வைத்தான் எனப்படும்; என்னை? முல்லை யென்னது ‘வைந்நுனை’ என்றதனான் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனை யாகாது மெல்லென்னு மாகலின். இல்லமும் கொன்றையும் மெல்லென்ற பிணி யவிழ்ந்தன வென்றான், முல்லைக்கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது, முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை இரும்பு திரித்தன்ன மருப்பு என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பம் தணிந்தில; இரும்பு முறுக்கி விட்ட வழி வெப்பம் மாறா (விட்ட) வாறு போல வெம்பா நின்றன இன்னும் என்றவாறு. ‘பரலவ லடைய இரலை தெறிப்ப’ எனவே, பரல்படு குழி தோறும் தெளிந்து நின்ற நீர்க்க விருந்தின வாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரலவலினது அடைகரை விடாது துள்ளகின்றனவென அதுவும் பருவந் தொடங்கினமை வறியவாறாயிற்று. ‘கருவி வானங் கதழுறை சிதறி’ என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகம் தமது வீக்கத்திடைக் காற்றெறியபபடுதலின் விரைந்து துளி சிதறின வென் றவற்றையும் புதுமை கூறினான். எனவே இவை யெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின், வற்புறுத்தற்கு இலேசாயிற்று. ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ என்பது, கொய்யாத உளை பல்கியம் கொய்த உளை பலகாலும் கொய்ய வேண்டு தலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு. அத்துனை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி
1. குறள் : 1158. 2. தொல். செய் : 104 |