பக்கம் எண் :

களிற்றியானை நிரை181

76. மருதம்

[தலைமகனை நயப்பித்துக்கொண்டா ளென்று கழறக் கேட்ட பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]

மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
தண்டுறை ஊரனெம் சேரி வந்தென
இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை
5. அவைபுகு பொருநர் பறையின் அனாது
கழறுப என்பவவன் பெண்டிர் அந்தில்
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்
வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல்
சுரியலம் பொருநனைக்
1காண்டி ரோவென
10. ஆதி மந்தி பேதுற் றினையச்
சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும்
அந்தண் காவிரி போலக்
கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே.

-பரணர்.

(சொ - ள்.) 1-2. மண் கனை முழவொடு மகிழ்மிகத் தூங்க - மார்ச்சனை செறிந்த மத்தளத்தொடு (காண்பார்க்கு) மகிழ்ச்சி மிக (யாங்கள்) கூத்தாட, தண்துறை ஊரன் எங்ம சேரி வந்தென்-தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக (அவ்வளவிற்கே);

3-6. அவன் பெண்டிர்-அவன் பெண்டிர், இன் கடுங் கள்ளின் அஃதை - இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பானது, களிற் றொடு நன்கலன் ஈயும் நாண்மகிழிருக்கை - யானைகளையும் நல்ல அணிகளையும் (பரிசிலர்க்கு) வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாளோலக் கத்தையுடைய, அவை புகு பொருநர் பறையின் - அவையிற் புகும் பொருநரது பறையைப்போல, ஆனாது கழறுப என்ப-ஒழியாது என்னை இகழவர் என்று கூறுவர்;

7-13. கச்சினன் காலினன் தேம் தார் மார்பினன் - கச்சினையும் கழலினையும் தேனொழுகும் தாரணிந்த மார்பினையும் உடையவனும், வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் - கூறுபாட்டின் அமைதியோடு விளங்கிய அழகு அமைந்த மாலையை யுடையவனும் ஆகிய, சுரியல் அம் பொருநனை - குழன்ற மயிரினையுடைய அழகிய


(பாடம்) 1. காணீரோ.