பக்கம் எண் :

184அகநானூறு

7-8. கயிறு பிணிக்குழிசி-கயிற்றாற் பிணித்தலையுற்ற குடத்தி லுள்ள, ஓலை கொண்மார்-ஓலையை எடுத்துக் கோடற்கு, பொறி கண்டு அழிக்கும் - அக் குடத்தின்மே லிட்ட இலச்சினையை அய்ந்து நீக்கம், ஆவண மாக்களின் - அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே ஈர்த்தெடத்தல் போல;

9-11. உயிர் திறம் பெயர - தம் உயிர் வேறொரு நற்பதவியிற் புக, தெறுவர நல் அமர்க் கடந்த - மாற்றா ரஞ்ச நற்போரை வென்று பட்ட, தறுகணாளர் குடர்- அஞ்சா வீரரின் குடரை, செஞ்செவி எருவை - சிவந்த செவியினையுடைய பருந்து, அஞ்சுவர - கண்டார் அஞ்சுமாறு, தரீஇ இகுக்கும் - வாங்கிப் போகடும்;

12-4. கல் அதர்க் கவலை போகின் - கற்களையுடைய கவர்த்த நெறியிற் பேபயின், சீறூர் புல் அரை இத்தி புகர் படு நீழல்-ஆங்குள்ள சீறூர்களின் பாங்கர்ப் புல்லிய அடியினையுடைய இத்தியின் புள்ளிபட்ட நிழலிலே, எல் வளி அலைக்கும் - பெருங் காற்று அலைக்கும், இருள் கூர் மாலை - இருள் மிக்க மாலைப் பொழுதில்;

15-19. வானவன் மறவன் - சேரன் படைத்தலைவனாகிய, வணங்கு வில் தடக்கை - வளைந்த வில்லைப் பெரிய கையிற்கொண்ட, ஆனா நறவின் வண் மகிழ்ப் பிட்டன் - அமையாத கள்ளினது மிக் மகிழ்ச்சியையுடைய பிட்டன் - அமையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பான், பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த . பகை மன்னரது அரிய போரில் எடுத்த, திருந்து இலை எஃகம் போல-திருந்திய இலைத் தொழிலையுடைய வேல் போல, இவள் பனிவார் கண் - நம் தலைவியத நீர் ஒழுகும் கண்கள் (தோன்றி), அருந் தயர் தரும் - அரிய தயரினைத் தரும் ஆதலால் என்க.

(முடிபு)நெஞ்சே வாழிய! நீ ஆள்வினை தரீஇயர் கானம் துன்னுதல் நன்றெனச் சூழந்தனையாயின், இன்னாச் சூழந்திசின்; (எதனாலெனின்,) முதுபாழாகிய கவலையைக் கடந்து செல்லுங்கால் மாலையில், இவள் பனிவார்கள் தோன்றிப், பிட்டன் பொருந்தா மன்னர் சமத்து உயர்த்த எஃகம் போல அருந்துயர் தரும் ஆதலால் என்க.

குழிசி ஒலை கொண்மார் பொறி கண்டழிக்கும் ஆவணமாக்கலின், எருவை தறுகணாவர் குடர் தரீஇ இருக்கும் கவலை என்க:

(வி - ரை.) தரீஇயர் - பொருள்தரீஇய ரென விரித்துரைக்க. சூழ்தலொடு தன்னைத் தூண்டுதலுங் கருதிப் பின்னின்று சூழ்ந்தனை யாயின் என்றான். பின்னின்று -உடன் நின்ற என்றுமாம். நன்றென்கூறிப் போந்து அதனாலாம் ஏதத்தைப் பின்னின்று ஆராய்வாயாயின் என்றுரைத்தலுமாம். நீங்கி - நீங்கலால் எனத் திரிக்க. சுட்டுடை முதுபாழ்-பலராலும் சுட்டப்படுதலுடைய பாழ் என்க. பாழாகிய கல்லதர்க் கவலை எனக்கூட்டுக. ‘கயிறு பிணிக் குழிசியோலை கொண்மார், பொறிகண் டழிக்கு மாவண மாக்களின்’ என்றது, ஊராண்மை நாட்டாண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற்