பக்கம் எண் :

188அகநானூறு

79. பாலை

[பொருள்வயிர் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

தோட்பதன் அமைத்த கருகை ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்து
கல்லுறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்
பாருடை மருங்கின் ஊறல் மண்டிய
5.  வன்புலம் துமியப் போசிக் கொங்கர்
படுமணி யாயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள்
அகலிரு விசம்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப
10.  வல்லாங்கு வருது மென்னா தல்குவர
வருந்தினை வாழியென் நெஞ்சே இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
கொடுவில் எயினர் கோட்சுரம் படர
15.  நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடை
கல்பிறங் கத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே.

-குடவாயிற் கீரத்தனார்.

(சொ - ள்.) 11. வாழி என் நெஞ்சே-,

11-7. ஆடுதொற கனையும் அவ்வாய்க் கடுந்துடி-அடுந்தோறும் ஒலிக்கும் அழகிய வாயினையுடைய கடிய தடியினையும், கொடுவில் எயினர் கோள் சுரம் படர-வளைந்த வில்லினையுமுடைய மறவர் (பகைவரை வளைத்துக்) கொள்ளும் சுரத்தின்கட் செல்ல, இரும் சிறை வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை - பெரிய சிறையினையும் வள்ந்த வாயினையுமுடைய பருந்தின் வெள்ளிய கண்ணினை யுடைய பேடை, நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடை - (தன் துணையினை நோக்கி) நெடுங் கூப்பீட செய்யும் செல்லத் தொலையாத நீண்ட இடமாய, கல் பிறங்கு அத்தம் போகி - கற்கள் விளங்கும் காட்டில்நடந்து, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீ-நிலை நில்லாத பொருளின்மேலுள்ள பற்றினால் பிரிதலுற்ற நீ;

1-9. தோட்பதன் அமைத்த கருங் கை ஆடவர் - தோளிலே தொங்கவிடும் சோற்று முடியைக் கோத்த வலிய கையினையுடைய