81. பாலை [பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது.] | நாளுலா எழுந்த கோள்வல் உளியம் ஒங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின் புல்லளைப் புற்றின் பல்கிளைச் சிதலை ஒருங்குமுயன் றெடுத்த நனைவாய் நெடூங்கோ | | 5. | டிரும்பூது குருகின் இடந்திரை தேரும் மண்பக வறந்த ஆங்கட் கண்பொரக் கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை நெறியயல் மராஅம் ஏறிப் புலம்புகொள எறிபருந் தயவும் என்றூழ் நீளிடை | | 10. | வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர் ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கம் மாவண் கடலன் விளங்கில் அன்னஎம் மையெழில் உண்கண் கலுழ | | 15. | ஐய சேறிரோ அகன்றுசெய் பொருட்கே. | | -ஆலம்பேரி சாத்தனார். |
(சொ - ள்.) 15. ஐய-, அகன்றுசெய் பொரட்கு - எம்மைப் பிரிந்துசென்று தேடும் பொருட்கு; 10-1. சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் - சிறந்த தலைமை வாய்ந்த நும் உள்ளம் தூண்டுதலின்; 11-4. கறுத்தோர் - வெகுண்டெழுந்த பகைவரது, ஒளிறு வேல் அழுவம் - ஒளிர்கின்ற வேலினையுடைய போர்க்களத்தை, களிறு படக் கடக்கம்-யானைகள் மடிய வெல்லும், மாவண் கடலன் விளங்கில் எனும் பதியை யொத்த, எம் எழில் மை உண்கண் கலுழ - எமது அழகிய மையுண்ட கண்ணினளாய தலைவி அழ; 1-6. நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்-விடியற் காலத்தே எபந்து உலாவிய தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி, ஒஙகசினை இருப்பைத் தீம் பழம் முனையின்-உயர்ந்த கிளைகளை யுடைய இருப்பை மரத்தின் இனிய பழத்தினை வெறுப்பின், பல்கிளைச் சிதலை-பல கிளைகளாய கறையான், நனைவாய் ஒருங்கு முயன்று எடுத்த-நனைந்த வாயால் ஒருங்குகூடி வருந்திக் கட்டிய, புல்அளைப் புற்றின்- |