84. முல்லை [தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது.] | மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில் பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித் 1தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர | 5. | இருநிலங் கவினிய ஏமுறு காலை நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாண்மலர் உதிரும் புறவடைந் திருந்த அருமுனை இயவில் | 10. | சீறூ ரோளே 2ஒண்ணுதல் யாமே எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடிநுடந் காரெயில் | 15. | அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ் வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே. | | -மதுரை எழுத்தாளன். |
(சொ - ள்.) 1.5. மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில் - மலைமீது வளைந்த அச்சந் தரும் அழகிய வில்லினையுடைய, பணை முழங்கு எழிலி - முரசமென முழங்கும் மேகம், பௌவம் வாங்கி-கடல் நீரை முகந்துகொண்டு, வலன் ஏர்பு வளைஇ - உலகினை வலனாக எழுந்து வளைத்து, தாழ் பெயல் பெருநீர் - இறங்கிப் பெய்யும் மிக்க மழையை, மாதிரம் புதைப்பப் பொழிதலின்-திசை யெல்லாம் மறையப் பொழிதலால், காண்வர இருநிலம் கவினிய ஏம்உறு காலை - காட்சி யுறப் பெரிய நிலம் அழகுபெற்ற இன்பம் எய்திய இக்காலத்தே; 10. ஒண்ணுதல் - ஒளி பொருந்திய நெற்றியினையுடைய நம் தலைவி; 6-10. அயிர்க்கண் படாஅர்த் துஞ்சு - நுண் மணலின்கண் ணுள்ள சிறு தூற்றினிடத்தே தூங்கும், நெருபபின் அன்ன சிறுகண் பன்றி - நெருப்பினை யொத்த சிறிய கண்ணினையுடைய பன்றியின்,
(பாடம்) 1. தாழ்பெயற் கெதிரி. 2. நன்னுதல். |