8-9. தன் சிதைவு அறிதல் அஞ்சி - னது குற்றத்தினை நான் அறிந்தமைக்க அஞ்சி, ஒண்சுடர் நல்இல் அருங்கடி நீவி - மிக்க ஒளி பொருந்திய எங்கள் நல்ல இல்லின் அரிய காவலைக் கடந்து. 11-13. வலை காண் பிணையின் போகி - வலையினை முன்னர்க் காணும் பெண் மான் அதனைத் தப்பி யோடுமாறு (விரைந்து) சென்று, தொலைவு இல் வெள்வேல் ஒர் விடலையொடு - தோற்றல் இல்லாத வெள்ளிய வேலினையுடைய ஒரு தலைவனொடு, இச் சுரம் ஈங்கு படர்தந் தோள் - இச் சுரத்தே இந் நெறியில் சென்றனள். 13-16. அஇடை - அப்பொழுதே, அந்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென - அருஞ்சுரத்துக் கள்வர் ஆக்களைத் தொழுவினின்றுங் கொண்டகன்றனராக, பின் படு பூசலின் வழிவழி ஓடி - அவர்கள் பின் சென்று செய்யும் போரினைப்போலப் பின்னே பின்னே (தொடர்ந்து செல்லுமிடங்களி லெல்லாம் ஓடி, மெய்த் தலைப்படுதல் செய்யேன் - அவள் மேனியை அணுகப் பெற்றிலேன். 16-17. இத்தலை நின்னொடு வினவல் கேளாய் - இவ்விடத்து நின்னொடு வினவுகின்றதை விரும்பிக் கேட்டு (அவர்கள் செல்லும்நெறி யினைக் கூறுவாயாக) (முடிபு) நவ்வி! யான் என் மகளை நோக்கி, கேதையல்லை; முகஞ் செய்தன, இலங்கின, சான்ற. அணங்குடைய, ஆதலால் காப்பும் பூண்டிசின், படாஅல், இனி யாங்கணும் போகலை எனவும், பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்தெனவும் கூற, அக் கானவன்மகள் ஆகிய என் மகள் அஞ்சி, நீவி, போகி, விடலையொடு ஈங்குப் படர்தந்தோள்; வழிவழி யோடி மெய்த்தலைப்படுதல் செய்யேன் இத்தலை நின்னொடு வினவல் கேளாய்: (அவர்கள் செல்லும் நெறி கூறுவாயாக.) தாலியினையும் அல்குலினையும் உடைய கானவன் மகள் எனவும், கானவன் மகளாகிய என் மகள் எனவும் கூட்டுக. (வி - ரை.) இச் செய்யுளின் துறை நச்சினார்க்கினியர், இது கானவன் மகளைக் கண்டு கூறியதும ாம் என, ‘எஞ்சியோர்க்கும்’1 என்னும் சூத்திரத்துக் கூறலின், ‘பொன்னொடு...கானவன் மகளே’ எனு மிச் செய்யுட் பகுதியை, செவிலி தான் கானகத்தே கண்ட தொரு மகளை விளித்துக் கூறியதாகக் கோடலுமாம்: அங்ஙனம் கொள்ளின் ‘இன்சிலை...போகி’ என்ற பகுதியை, ‘இன்சிலை ஏறுடையினத்த வலை காண் நாறுயிர் நவ்விப் பிணையிற் போகி’ எனக் கூட்டி யுரைத்துப் போகிப் படர்தந்தோள் என முடிக்க. ‘மூப்பு’ என முன்வந் தமையின், ‘முதுபதி’ பதியென்னும் பெயர் மாத்திரையே யாகும். சின்: அசை. நவ்வியின் இனிய குரலைப் பாராட்டுவாள் இன்சிலை என்றாள். வெப்பம் தாங்கலாற்றாது உயிர்த்திடும் இளமைச் செவ்வியினதாதல், நாறுயிர்
1. தொல். அகத்: 42. |