பக்கம் எண் :

30அகநானூறு

 ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
20. கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக்
கைகவியாச் சென்று கண்தயாக் குறுகிப்
பிடிக்கை அன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல்
25. அந்தீங் கிளவிக் குறுமகள்
மென்றோள் பெறநசைஇச்
1 சென்ற என் நெஞ்சே.
 

-கல்லாடனார்.

(சொ - ள்.) 1-10. கொல் வினைப் பொலிந்த - கொற்றொழிலாற் சிறந்த,கூர் குறு புழுகின் - கூரிய குறிய புழுகெனப் பெயரிய, வில்லோர் தூணி வீங்கப் பெய்த - வில்வீரர் அம்புக் கூட்டில் மிகப் பெய்திருக்கும், அப்பு நுனி ஏய்ப்ப - குப்பி நுனியை ஒப்ப, அரும்பிய இருப்பை - அரும்பிய இருப்பையது, செப்பு அடர் அன்ன - செப்புத் தகட்டை யொத்த, செங்குழை அகம்தொறும்-சிவந்த தளிர்களினிடந் தொறும், இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் - நெய்யை யொத்த இனிய துளையுள்ள பூக்கள், ஆர் கழல்பு - ஆர்க்குக் கழன்று, உழுது காண் துளையவாகி - காம்பினை நீக்கிக் காணத்தக்க துளையினையுடைய வாய், ஆலி வானிற் காலொடு பாறி - வானினின்று விழும் பனிக்கட்டி போலக் காற்றாற் சிதறுண்டு, துப்பின் அன்ன செங்கோட்டு இயவின் - பவளம் போன்ற சிவந்த மேடாகிய வழிகளில், நெய்ததோர் மீமிசை நிணத்தில் பரிக்கும் - குருதிமீ துள்ள கொழுப் பெனப் பரக்கும், அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் - சுரத்திலே பொருந்திய அழகிய குடிகளையுடைய சிற்றூர்க் கண்ணே,

10-12. கொடு நுண் ஓதி மகளிர் ஒக்கிய தொடிமாண் உலக்கை தூண்டு உரல். பாணி-வளைந்த நுண்ணிய கூந்தலினயைுடைய பெண்டிர்கள் உயர்த்த பூண்மாண்ட உலக்கையாற் குற்றும் உரலினின்றெழும் ஒலி.

13-14. நெடுமால் வரைய குடிஞையோடு இரடடும் குன்று - நெடிய பெரிய பக்க மலையிலுள்ள ஆந்தை யொலியொடு மாறி மாறி ஒலிக்கும் குன்றுகள், பின் ஒழியப் போகி - பின்னே ஒழிய முன்னே போய்,

14-17. ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது-ஞாயிறு மறைந்திடினும் ஊர் சேய்மையிடத்தது என்று கூறி யொழியாது, துனைபரி


(பாடம்) 1. மென்றோள் நசைஇ.