பக்கம் எண் :

களிற்றியானை நிரை35

மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடி எடுத்த. அம் சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி - அழகிய கார்த்திகைவிளக்கின் நெடிய ஒழுங்கு போலத் தோன்ற, கயம் தகள் ஆகிய பயம் தபு கானம் - குளங்கள் நீரற்றுத் தகள்பட்டிருக்கும் வளம் தப்பிய காட்டில், கம்மென எம்மொடு கழந்தனராயின்-நம் தலைவர் விரைவாக நம்மை உடன் கொண்டு கழிந்தனராயின்,

8-11. வம்பு விரித்த அன்ன பொங்கு மணல் கான்யாற்று-கச்சினை விரித்துப் பரப்பி வைத்தாலன்ன - விளங்கும் மணல் மிக்க காட்டாற்றினத, பயில் இணர்படு சினை தாழ்ந்த எக்கர் - மிக்க பூங் கொத்துக்களையுடைய பெரிய கிளைகள் தாழ்ந்துள மணல் மேட்டில், மெய் புகுவு அன்ன - மெய்கள் ஒன்றின் ஒன்று புகுவதை ஒத்த, கை கவர் முயக்கம் - கைவிரும்பும் முயக்கத்தினை, நயவர அவரும் பெறுகுவர்மன் - அன்பு தோன்ற அவரும் அடைவர்,

12-15. பழி தீர் கண்ணும் - எமது குற்றமற்ற கண்களும், நீர்வார் நிகர் மலர் கடுப்ப-நீர் சொரியும் ஒளி பொருந்திய மலரையொப்ப, ஒ மறந்து - ஒழிதலின்று, அறு குளம் நிறைக்குந போல - நீரற்ற குளத்தினைப் பெருக்கும் மடை போல, அல்கலும் மேவல ஆகிப்படுகுவ மன் - நாளும் அழுதலைப் பொருந்தாவாகத் துயிலப்பெறும்.

(முடிபு) (நம் தலைவர்) கானம் எம்மொடு கழிந்தனராயின், முயக்கம் அவரும் பெறுகுவர்; (நம்) கண்ணும் படுகுவ.

(வி - ரை.) இலவம் - இலவம் பூ. தோன்றி - தோன்ற எனத் திரிக்க. கம்மென-விரைய, தேய வழக்கு. ‘கம்மென வெழுதரு பெரும்படை’1 என்பதூஉங் காண்க. கார்த்திகைத் திங்களின் காத்திகை நாளில் இல்லந்தோறும் வரிசையாக விளக்குகளை ஏற்றிவைத்து விழா அயர்தல், சங்கச் செய்யுட்கள் பலவற்றிற் கூறப் பெறுதலின், தமிழ்நாட்டில் பண்டு தொட்டு இவ் வழக்கம் இருந்து வருவதென்பது பெற்றாம்; “அம்ம வாழி தோழி கைம்மிக”2 என்னும் பாட்டினுள் கார்த்திகை விழாக் கொண்டாடும் முறைமையும், “எல்வளை ஞெகிழச் சாஅய்”3 என்னும் பாட்டினுள், “பெருவிழா விளக்கம் போலப் பலவுடன், இலையில மலர்ந்த இலவமொடு” என இவ்வுவமையும் இந்நூலுட் பின்னர் வருவதுங் காண்க. எம்மொடு கழிந்தனராயின், கண்ணும் அழுதல் மேவலவாகிப் படுகுவ என எதிர்வுபற்றிக் கூறலின், ஆற்றுவல் என்பது படச் சொல்லிய தென்னும் துறையாயிற்று. மன் கழிவின்கண் வந்தது எனக் கொள்ளின், ஆற்றாது இரங்குதல் நிகழ்ந்ததாம். நச்சினார்க்கினியர் இதபை் 4பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டியவாறும் காண்க.


1. புறம் : 292.

2. அகம் : 141.

3. அகம் : 185.

4. தொல். அகத் : 65.