| துருவும் புகழு மாகி விரிசீர்த் தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம் | | 10 | பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச் சிறுகண் யானை செவ்விதி னேவிப் பாசவற் படப்பை யாரெயில் பலதந் | | 15 | தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப் பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த | | 20 | நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே வாடுக விறைவநின் கண்ணி யொன்னார் நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே | | 25 | ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே. |
(பி - ம்.) 9 ‘தெரிகோற்சமன்போல’ 10 ‘பற்றிலியரே’ 12 ‘யடர்ப்புகர்ச்’ 13 ‘னேஎய்ப்’ 17 ‘பணீஇயரத்தை’ 20 ‘நான்மறை முதல்வ’ 21 ‘வியவுணின்’ 23 ‘சொலிகவத்தைநின்’ 29 ‘மன்னுக’ திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலுமாம். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது. (இ - ள்.) வடக்கின்கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும், தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய 1கன்னியாற்றின்
உரை. 1. கன்னியாறு : பாண்டிநாட்டைக் கன்னிநாடென்பது இதனாலும் இருத்தல் கூடும்; வேறு கூறுவாருமுளர்; திருவிளை. தடாதகைப். 61
|