பக்கம் எண் :

237

(கு - ரை.) 2. பரிசின் மாக்கள் : புறநா. 6 : 16, 24; 30.

3. வரிசை : புறநா. 6 : 16; 47 : 6; "வரிசை யறிதலும்" (சிறுபாண். 217) ; "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அது நோக்கி வாழ்வார் பலர்" (குறள், 528) ; "தத்தம், வரிசையா னின்புறூஉமேல்" (நான்மணிக். 67)
5. மு. புறநா. 35 : 30.

மு. பாடாண்டிணைக்குரிய விடைகள் பலவற்றுள், சிறிதென்ற விடைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந.

(121)

122

கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
5மூவரு ளொருவன் றுப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
10நினதென விலைநீ பெருமிதத் தையே.

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) கடலாற் கொள்ளப்படாது, அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற்கொள்ளார், வீரக்கழலணிந்த 1இலக்கணத்தாற்றிருந்திய நல்ல அடியையுடைய காரி! நினது நாடு; அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; கெடாத செல்வத்தினையும் வென்றிபொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாகவேண்டுமென்று அம்மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும்பொருள், நுமது குடியை வாழ்த்தினராய்வரும் பரிசிலருடையது; ஆதலால் வடதிசைக்கட்டோன்றும் அருந்ததியையொக்கும் கற்பினையும் மெல்லிய மொழியினையுமுடைய அரிவையுடைய தோள்மாத்திரை யல்லது நின்னுடையதென்று சொல்ல ஒன்றுடையையல்லையாயிருக்கவும் நீ பெரிய செருக்கினையுடையையாய் இராநின்றாய்; இதற்குக் காரணம் என்னை?-எ-று.

ஏத்தினர்தரூஉமென்று பன்மையாற்கூறியது அவ்வேந்தன் அமைச்சரை.


1.திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடியென்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்; மதுரைக். 436, உரை.