‘அன்றி‘ என்னும் குறிப்புவினையெச்சத்தின் ஈற்று இகரம் செய்யுளில் உகரமாகத் திரிந்துவந்ததற்கும் (தொல். உயிர்மயங்கு. சூ. 35, இளம்., ந.; நன். சூ. 172, மயிலை. நன். வி. சூ. 173; இ. வி.சூ. 91, உரை) , அது செய்தெனெச்ச வினைக்குறிப்பாய் வந்ததற்கும் (தொல். வினை. சூ. 34, தெய்வச்.; சூ. 31, ந.; நன். சூ. 343, மயிலை,; இ. வி. சூ. 246, உரை) மேற்கோள். 2. திறனன்று மொழிதல்: "திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும், பொருளு மதனினூஉங் கில்" (குறள், 644) 1 - 3. குறுந். 140. வினையெச்சக்குறிப்பு அடுக்கிவந்து ஒருவினை கொண்டதற்கு மேற் கோள் (நன். சூ. 354, மயிலை.) ; இவை அடுக்காகா வென்பர் விருத்தி யுரையாசிரியர்; நன். சூ. 355. 4. புறநா. 369 : 22 - 3. மு. புறநா. 92. (124) 125 | பருத்திப் பெண்டின் பனுவ லன்ன நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே | | 5 | நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாளநின் மகிழிருக்கையே உழுத நோன்பக டழிதின் றாங்கு நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே குன்றத் தன்ன களிறு பெயரக் | | 10 | கடந்தட்டு வென்றோனு நிற்கூ றும்மே வெலீஇயோ னிவனெனக் கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு விரைந்துவந்து சமந்தாங்கிய வல்வேன் மலைய னல்ல னாயின் | | 15 | நல்லமர் கடத்த லெளிதும னமக்கெனத் தோற்றோன் றானு நிற்கூ றும்மே தொலைஇயோ னிவனென ஒருநீ யாயினை பெரும பெருமழைக் கிருக்கை சான்ற வுயர்மலைத் | | 20 | 20 திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே. |
(பி - ம்.) 13 ‘சமரந்’ திணை - வாகை; துறை - அரசவாகை.
|