பக்கம் எண் :

391

அழல்போலப் பாடம் (ஒளி) செய்யும் மேனியெனினும் அமையும்.

(கு - ரை.) 3. ‘‘வீறுசால் புதல்வர்ப் பெற்றனை” (பதிற். 73)

(222)

223

பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
5டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே.

(பி - ம்.) 1 ‘மீக்கூறத்’

திணையும் துறையும் அவை.

கல்லாகியும் இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.

(இ - ள்.) பலர்க்கும் அருளுடைமையான் நிழலையொத்து உலகத்தார் மிகுத்துச் சொல்ல 1உலகத்தையாளுந்தன்மை முடியச்செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவுபோகாமையின் வடக்கிருத்தற்கு வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து உயிர்நீத்தலின் நிலைபெற நடப்பட்ட கல்லான இடத்தும் இடங்கொடுத்தளிப்பர் நிச்சயமாக; உடம்போடு இனியவுயிர் விரும்பு மாறுபோல விரும்பும் உரிமையையுடைய பழையதாகிய நட்பையுடையோர் தம்மிடத்தே செல்லின்-எ - று.

மீக்கூறியென்பது மீக்கூறவெனத் திரிக்கப்பட்டது; ஆணைகூறி யென்றுமாம்.

தொன்னட்புடையோர் தம்முழைச் செலின், இடங்கொடுத்தளிப்ப வெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

அவன் நட்பினை வியந்து கூறியது.

(கு - ரை.) 2. தலைப்போதல் - முடிவுபோதல்.

3. நடுகல் : புறநா. 221 : 13.

(223)

224

அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம்
துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி
இரும்பாணொக்கற் கடும்பு புரந்ததூஉம்
அறமறக் கண்டநெறிமா ணவையத்து
5முறைநற்கறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத்துகளறு மகளிரொடு
பருதி யுருவிற் பல்படைப்புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

1.‘‘தருமங் கைதர, மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன், என்னுயிர்க் குறுவதுஞ் செய்ய வெண்ணினேன்”(கம்ப. அயோத்தி. மந்திர. 15)