பக்கம் எண் :

394

திணையும் துறையும் அவை.

சோழன்நலங்கிள்ளியை ஆலத்தூர்கிழார் பாடியது.

(இ - ள்.) முன்செல்லும் 1தூசிப்படையோர் பனையின்கண்உளதாகிய நுங்கினது இனிய செறிவை அயில, இடைச்செல்வோர்பழத்தினது செவ்விக்கனியை நுகர, பின்செல்வோர்நீங்கிய வாயையுடைய பிசிருடனே சுடப்பட்ட கிழங்கினை நுகரஇப்படி ஒழுங்குடைத்தாகி இடமகன்ற உலகத்து வலமுறையாகச்சூழ்ந்து மன்னரை வலிகெடுத்த மேம்பட்ட வேலையுடையசேனையுடனே கூடிய வலியென்று சொல்லப்பட்டதன் விளைவைஇனிக் கேட்பாயாக: கள்ளியோங்கிய களர்நிலமாகியபாழ்பட்ட இடத்து முள்ளுடைத்தாகிய பெரிய புறங்காட்டின்கண்ணதாயிற்று, பெரிதும் சேட்சென்னிநலங்கிள்ளிகேட்பான் கொல்லோ என அஞ்சி இனிய ஓசையையுடையமுரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க முன்பு தூக்கணங்குருவியினதுதூங்கப்பட்ட கூட்டையொப்ப ஒருபக்கத்தே தூங்கப்பட்டவலத்திலே புரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; இப்பொழுதுஉலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே பள்ளியெழுச்சிக்காலத்தே தோன்றினும் அதனைக் கேட்டு இறந்துபடாதுநோமளவினே னாயினேன் - எ - று.

முன்பு நலங்கிள்ளிசேட்சென்னி கேட்குவன்கொல்லென ஒருசிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலாநிற்கப் பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேனெனக்கூட்டி வினைமுடிவுசெய்க.

கேளினியென்றது நெஞ்சினை.

‘வென்றிநுவலா’ என்றும், ‘காலைதோன்றின’ என்றும் பாடமோதுவாரும் உளர்.

(கு - ரை.) 4.புறநா. 31 : 15.

7. மு. புறநா. 245 : 3 - 13, 237 : 13.

9. சேட்சென்னிநலங்கிள்ளி : புறநா. 27 : 10.

12-3. ‘‘வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய, காலை முரசங்கனைகுர லியம்ப” (சிலப். 14 : 13-4) ; ‘‘இயம்பும்வெண் சங்கெங்கும்”, ‘‘குருகுக ளியம்பின வியம்பின சங்கம்” (திருவா. திருவெம்பாவை, திருப் பள்ளியெழுச்சி) ; ‘‘புள்ளரையன் கோயில், வெள்ளை விளிசங்கின் பேரரவங் கேட்டிலையோ” (திருப்பாவை, 6)

(225)


1.தூசிப்படை - முன்படை; சேனையின் முதலிற்செல்வோர் பனைநுங்கின் தீஞ்சேறுமிசைய வென்றதும், இடையிற்செல்வோர் பனங்கனிமாந்தவென்றதும், கடையிற்செல்வோர் பனம்பிசிரையும் சுட்ட பனங்கிழங்கையும் நுகரவென்றதும் சேனையின் மிகுதியையும் அது செல்லுதற்குரிய கால நீட்சியையும் உணர்த்தி நின்றன.