பக்கம் எண் :

395

226

செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்
உற்றன் றாயினு முய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழு தேத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
5மண்டமர் கடக்குந் தானைத்
திண்டேர் வளவற் கொண்ட கூற்றே.


(பி - ம்.) 5 ‘கடந்ததானைத்’ 6 ‘திண்டோள்’

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

(இ - ள்.) தன்மனத்துள்ளே கறுவுகொண்டதாயினும் வெளிப்பட நின்று வெகுண்டதாயினும் உற்றுநின்று கையோடு மெய்தீண்டி வருத்திற் றாயினும் அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுவாரைப்போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்; பொன்னான் இயன்ற மாலையினையும் மண்டியபோரின்கண் எதிர்நின்று வெல்லும் படையினையும் திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று-எ - று.

பொலந்தார் வளவனென இயையும்.

கூற்றம் இரந்ததாகல்வேண்டும்; இம்மூன்றினுள் ஒன்றுசெய்யினும் பிழைப்பின்றெனக் கூட்டுக.

இஃது அவனாண்மை மிகுதியினையும் வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறு.

(கு - ரை.) 3. ‘‘கைதொழூஉப் பரவி” (முருகு. 252)

4. புறநா. 220 : 5; ‘‘உயிரிரக்குங் கொடுங்கூற்றி னுளையச் சொன்னான்” (கம்ப. கையடை. 10)

5. கடத்தல் - வஞ்சியாது எதிர்நின்று வெல்லல். புறநா. 213:1. மு. காஞ்சித்திணைத்துறைகளுள், 'கழிந்தோர் தேத்துக் கழிபட ருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை” என்பதற்கும் (தொல். புறத்திணை. சூ. 19, இளம்.) , மன் அடாது வந்த மன்னைக்காஞ்சிக்கும் (தொல். புறத். சூ. 24, .) மேற்கோள்.

(226)

227

நனிபே தையே நயனில் கூற்றம்
விரகின் மையின் வித்தட் டுண்டனை
இன்னுங் காண்குவை நன்வா யாகுதல்
ஒளிறுவாண் மறவருங் களிறு மாவும்
5குருதியங் குரூஉப்புனற் பொருகளத் தொழிய
நாளு மானான் கடந்தட் டென்றுநின்
வாடுபசி யருத்தியபழிதீ ராற்றல்