பக்கம் எண் :

4

அழகொடு முடித்த வருமைத்து” (சிலப். 2 : 38 - 9) ; ‘‘அப்பிறை, பதினெண் கணனு மேத்தவும் படுமே யென்றார் புறப்பாட்டினும்” (சிலப். 2 : 38 - 9, அடியார்.) ; வி. பா. குருகுலச். 6.

11 - 2. ஆசிரியப்பாவில் ஈற்றயலடி முச்சீர்த்தாய் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல். செய். சூ. 68, பேர்.

13. அருந்தவத்தோன் : ‘‘அருந்தவ முதல்வன்” (கலித். 100 : 7) ; ‘‘நற்றவனைப் புற்றரவ நாணி னானை”, ‘‘நற்றவனை நான்மறைகளாயி னானை”, ‘‘நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே”, ‘‘நற்றவன் காண்”, ‘‘மாதொர் கூறுடை நற்றவனை” (தே.) ; ‘‘அருந்தவ னதிசயித்து” (திருவால. 61 : 6) .

(1)

2

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
5தீமுரணிய நீரு மென்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலு மளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
10வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
15ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
20நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே.

(பி - ம்.) 20 ‘நிலையரோ’