எழினி களஞ்சேர ஒருவனாருயிர் உண்ணாயாயின் அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகி ஆர்குவை; அதுகழிந்ததேயெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ‘கடும்பசி கலங்கிய’ என்றும் பாடம். (கு - ரை.) 6. எழினி : புறநா. 158: 8 - 9; அகநா. 36, 105, 197, 211. 7. புறநா. 4: 18, குறிப்புரை. 11. புறநா. 210: 8. 13. புறநா. 227: 2. (230) 231 | எறிபுனக் குறவன் குறைய லன்ன கரிபுற விறகி னீம வொள்ளழற் குறுகினுங் குறுகுக குறுகாது சென்று விசும்புற நீளினு நீள்க பசுங்கதிர்த் | 5 | திங்க ளன்ன வெண்குடை ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே. | திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.) அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது (பி - ம். அவனை அவர் பாடியது) (இ - ள்.) வெட்டிச்சுட்ட கொல்லைநிலத்துக் குறவனால் தறிக்கப்பட்ட துண்டம் போன்ற கரிந்த புறத்தையுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய அழலின்கண் உடல் சுடச் சென்று அணுகினும் அணுகுக; அவ்வாறு அணுகாதுபோய் வறிதே ஆகாயத்தையுற ஓங்கினும் ஓங்குக; குளிர்ந்த சுடரையுடைய மதி போலும் வெண்கொற்றக் குடையையுடைய ஒள்ளிய ஞாயிற்றையொப்போனது புகழ்மாயா-எ - று. ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. இனி ஈமவொள்ளழல் இவனுடல் சிதையாமற் சிறுகினுஞ் சிறுகுக; அன்றிச் சிதையும்படி சென்று நீளினும் நீளுக; இவன் புகழ் மாயாவெனினும் அமையும். ‘எரிபுனக் குறவன்’ என்று பாடமோதுவாரும் உளர். (கு - ரை.) 5. புறநா. 3: 1, 22 : 11- 2, 392 : 1. 2- 6.புறநா. 239 : 20 - 21. (231) 232 | இல்லா கியரோ காலை மாலை அல்லா கியர்யான் வாழு நாளே நடுகற் பீலி சூட்டி நாரரி சிறுகலத் துகுப்பவுங் கொள்வன்கொல்லோ | 5 | கோடுயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே. |
|