திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - தும்பை; துறை - பாண்பாட்டு) அவனை அவர் பாடியது. (இ - ள்.) அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக ; யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஒருபயன்படாமையின் அவை யல்லவாக; நடப்பட்ட கல்லின்கட் பீலியைச் சூட்டி 1நாரால் அரிக்கப்பட்ட தேறலைச் சிறிய கலத்தான் உகுப்பவும் அதனைக் கொள்வனோ, கொள்ளானோ சிகரமோங்கிய உயர்ந்த மலைபொருந்திய நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்?-எ - று. நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத்துகுப்பவும் கொள்வன் கொல்லோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. (கு - ரை.) 1. இல்லாகியர் : புறநா. 190 : 5. ஆகியர் - வியங்கோள். 3. புறநா. 264 : 3 - 4. நார் - பன்னாடை. (232) 233 | பொய்யா கியரோ பொய்யா கியரோ பாவடி யானை பரிசிலர்க் கருகாச் சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ | 5 | இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட் போரடு தானை யெவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பலவென வைகுறு விடிய லியம்பிய குரலே. |
திணையும் துறையும் அவை. வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது. (இ - ள்.) பொய்யாகுக; பொய்யாகுக; பரந்த அடியினையுடைய யானையைப் பரிசிலர்க்குக் குறைவறக் கொடுக்கும் சீர்மைபொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உளதாகிய பொன்னாற் செய்யப்பட்ட ஆழிபோலப் பொய்யாகுக; பெரிய பாண்சுற்றத்திற்கு முதல்வன், பேரணிகலத்தினையுடைய, போரின்கட் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண் வேல் தைத்த சிறந்தபுண் பலவென வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை-எ - று. பெரும்பூண் மார்பென இயையும். திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை. பொன் : ஈண்டு இரும்பு. அடுக்கு விரைவின்கண் வந்தது. இயம்பிய குரல் பொய்யாகியரெனக்கூட்டுக.
1.புறநா. 297 : 5 - 6.
|