235 | சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே | 5 | பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாந்தானிற்கு மன்னே நரந்த நாறுந் தன்கையாற் புலவு நாறு மென்றலை தைவரு மன்னே | 10 | அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவன்
| 15 | அருநிறத் தியங்கிய வேலே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ இனிப,் பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் | 20 | றீயாது வீயு முயிர்தவப் பலவே. |
(பி - ம்.) 10 ‘அருங்கலை’ 10 - 11 ‘துளையிரப்போர்’ 12 ‘பார்வை’ 15 ‘திருநிறத்திலங்கிய’ 17 ‘பாடுநருக்கொன் றீயுநரும்’ திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது. (இ - ள்.) சிறிய அளவினையுடைய மதுவைப் பெறின் எங்களுக்குத் தருவன்; அது கழிந்தது! பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின் அதனை யாமுண்டு பாட எஞ்சிய மதுவைத் தான் விரும்பி நுகர்வான்; அது கழிந்தது! சோறு எல்லார்க்கும் பொதுவாதலாற் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! என்போடுகூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்; அது கழிந்தது! அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய போர்க்களமுழுதும் தான் சென்றுநிற்பன்; அதுகழிந்ததே! தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான் நரந்தப்பூ நாறும் தன்னுடைய கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய தலையைத் தடவுவன்; அது கழிந்ததே! அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி
|