பக்கம் எண் :

414

‘நட்டோரை யுயர்புகூறினன்' என்றது,1தான் உயர்த்துக்கூறவே யாவரும் உயர்த்துக்கூறுவரென்பதாம்.

‘மயக்குடையமொழிவிடுத்தனன்'என்பதற்கு உலகவொழுக்கத்தில்மயக்கமுடைய சொற்கள்தன்னிடைப் புகுதாமல்விடுத்தானென்றும், பொருண்மயங்கியசொற்களைத்தன்னிடத்துப் புகுதாமல் விடுத்தானென்றும்உரைப்பினும்அமையும்.

ஒன்றோவென்பது எண்ணிடைச்சொல்.

(கு - ரை.) 3. புறநா. 161: 26- 7.

4- 5. புறநா. 38: 5 - 6; பழ. 398;‘’நட்டவர்குடியுயர்க்குவை,செற்றவ ரரசுபெயர்க்குவை” (மதுரைக்.131 - 2)

6. ‘’பகைவர்க்கஞ்சிப் பணிந்தொழுகலையே” (மதுரைக். 201)

6-7. ‘வலியரென...மீக்கூறலன்:எனத்தன்கண்ணும் பிறன் கண்ணுந் தோன்றிய மென்மைபற்றிஇளிவரல்பிறந்தன’ (தொல். மெய்ப்பாடு. சூ.6, பேர்.;இ. வி. சூ. 578, உரை)

19-21. ‘’கரும்பாட்டிக்கட்டி சிறுகாலைக்கொண்டார், துரும் பெழுந்து வேங்காற்றுயராண் டுழவார்,வருந்தி யுடம்பின் பயன்கொண்டார்கூற்றம்,வருங்காற் பரிவ திலர்” (நாலடி. 35)

மு.ஈற்றயலடி நாற்சீரான் வந்தவஞ்சிப்பாவிற்கும் (தொல். செய். சூ. 67, இளம்.) ,பிரிந்திசைத்தூங்கற்குறளடிவஞ்சிப்பாவிற்கும் (யா.வி. சூ. 37) மேற்கோள்.

(239)

240

ஆடுநடைப் புரவியங் களிறுந் தேரும்
வாடா யாணர் நாடு மூரும்
பாடுநர்க் கருகா வாஅ யண்டிரன்
கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு
5கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப
மேலோ ருலக மெய்தின னெனாஅப்
பொத்த வறையுட் போழ்வாய்க் கூகை
சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி
10ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசிய ராகிப்பிறர்
நாடுபடு செலவின ராயின ரினியே.

1 "மாகஞ்சிறுகக் குவித்துநிதிக்குவை, ஈகையி னேக்கழுத்தமிக்குடைய - மாகொல்,பகைமுகத்த வென்வேலான் பார்வையிற்றீட்டும்,நகைமுகத்த நன்கு மதிப்பு" (நீதிநெறி. 39)