| ஞாங்கர்மாய்ந்தனண் மடந்தை இன்னும் வாழ்வ லென்னிதன்பண்பே. |
திணையும் துறையும் அவை. சேரமான்கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை தன்பெருங்கோப்பெண்டுதுஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு. (இ - ள்.) எப்படிப் பெரிதாயினும்யானுற்ற நோயினது எல்லை எவ்வளவாயிற்று,என்னுயிரைப்போக்கமாட்டாத வலியையுடைத்தல்லாமையால்?கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள் வெள்ளிடையின்மூட்டிய தீயை விளைக்கும் சிறியவிறகையுடைய படுக்கையின்கண்ஒள்ளிய அழலாகிய பாயலின்கண்ணேபொருந்தப்பண்ணிமேலுலகத்தே போயினாள், மடவாள்;அவள் மாயவும் இன்னமும்உயிரிருந்துவாழ்வேன்; இவ்வுலகியற்கைஇருந்தவாறுஎன்னோ! - எ - று. எனைத்தென்றது,உயிரைப் போக்கமாட்டாமையின்நோயை இகழ்ந்துகூறியவாறு. ‘பாவை சேர்த்தி’ என்றோதிஅவளுடம்பை அழகுபடப் பள்ளியுட் கிடத்தியென்றுஉரைப்பாரும் உளர். உயிர் செகுக்கலாமைக்குக் காரணம்மதுகையுடைத்தல்லாமையென வுணர்க. பாயல்சேர்த்தி இன்னும்வாழ்வலெனஇயையும். சேர்த்தவெனத் திரிப்பினும்அமையும். ‘ஞாங்கர் மாய்ந்தனள்’ என்பதற்குஎன்னை நீத்து முன்னே இறந்தாளென்றுமாம். (கு - ரை.) 3. மு. புறநா. 225 : 7,237 : 13. 5. பள்ளிப்பாயல் - ஒருபொருட்பன்மொழி. மு. ‘’கழல்சேர்ந்த தாள்விடலைகாதலிமெய் தீண்டும், அழல் சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான்-குழல்சேர்ந்த,தாமந் தரியா தசையுந் தளிர்மேனி, ஈமந் தரிக்குமோவென்று” (தண்டி. சூ. 68, மேற்.) காஞ்சித்திணைத்துறைகளுள், ‘காதலியிழந்ததபுதாரநிலை’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 19, இளம்.; சூ. 24, ந. (245) 246 | பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட | | 5 | காழ்போனல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்தகைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடுபுளிப்பெய் தட்ட |
|