பக்கம் எண் :

422

கண்ணையுடையளாய்ப் புறங்காட்டைப்பார்த்துத் தான் சுழலும்,தன் தலைவன் முழவினது கண்மார்ச்சனையுலராத காவலையுடையஅகலிய கோயிலுள் மிகச்சிறிது பொழுது தனித்திருப்பினும்இனிய உயிர்தளரும் தன் இளமை புறங்கொடுத்து- எ-று.

...............................யானவற்கு அஞ்சிநடுங்குதல்..........................................

இளமை புறங்கொடுத்துப் பெருங்காடுநோக்கித் தான் தெருமருமெனக் கூட்டுக.

அம்ம: அசை.

(கு - ரை.) 1-2. புறநா. 251: 5 - 6,குறிப்புரை. கலித். 34: 11.

3. வைகுதல் - துயிலல்; சிலப். 10: 1.

4. ‘’மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றில்”(பெரும்பாண். 497)

(247)

248

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளைய மாகத் தழையா யினவே
இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னா வைக லுண்ணும்
5அல்லிப் படூஉம் புல்லா யினவே.

திணை - அது; துறை - தாபதநிலை.
...............ஒக்கூர் (பி - ம். எக்கூர்) மாசாத்தனார்பாடியது.

தாபதநிலையாவது:-
‘’குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூறின்று” (பு. வெ.257)

(இ. ள்.) இரங்கத்தக்கன,சிறிய வெளிய ஆம்பல்; அவைதாம், யாம் இளையேமாயிருக்கமுற்காலத்துத் தழையாயுதவின; இக்காலத்துப் பெரியசெல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக உண்ணுங்காலைமாறி இன்னாத வைகும்பொழுதின்கண் உண்ணும் தம் அல்லியிடத்துண்டாம்புல்லரிசியாய் உதவின-எ - று.

தாம் இன்புறுங்காலத்தும்துன்புறுங்காலத்தும் துணையாய் உதவின வாதலான், அளியவாயினவெனஆம்பலைநோக்கிக் கூறியவாறாயிற்று.

1 நெல்லலாவுணவெல்லாம்புல்லென்றல் மரபு.

(கு - ரை.) 1-2. ‘’வயன்மல ராம்பற்கயிலமை நுடங்குதழை” (ஐங்குறு. 72) ; ‘’ அயவெள்ளாம்ப லம்பகை நெறித்தழை” (குறுந்.


1 ‘புல்லென்பது பலபொருளொருசொல்லாகலான்நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் புல்லென்பதுஉணவின் மேற்கொள்க’ (தொல். மரபு. சூ. 25, பேர்.) ;‘’புல்லார் பவர்கணெற் சோறுபெற்றாங்கு” (வெங்கைக்.18)