பக்கம் எண் :

594

25எம்மோ ராக்கக் கங்குண்டே
மாரிவானத்து மீனாப்பண்
விரிகதிர வெண்டிங்களின்
விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
30நிரைசா னன்கல னல்கி
உரைசெலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே.

(பி - ம்.) 2 ‘மலர்ப்பூஙகுநது' 5 ‘உண்டுநீர்கூறுமணற்' 6 ‘புள்ளிரிவுந்து' 12 - 6 ‘கழுமியவௌவெலியிலவளநீகிர வாடடெறறெழுனியாகென கிணைவெமபெறாயகழுமியவௌளையி' 17 ‘னிணமபெயதநதுறு' 19 ‘மறந்த' 23 ‘ரொககெல' 25 ‘ராககககஙகணடெ', ‘ராககககயங குணடே' 26 ‘மீனாலபபண'

திணையும் துறையும் அவை.

வாட்டாற்றெழினியாதனை மாங்குடிகிழார்.

(கு - ரை.) 1. வழங்குந்து - செல்லாநிற்கும்.

2. மேனீரில் கருங்குவளைமலர் பூக்கும்.

4. அரிப்பறை - ஒருவகைப்பறை ; அரித்தெழும் ஓசையையுடையது ; 'அரிப்பறை வினைஞர்' ('ஐங்குறு.81) ; 'அரிக்கூட் டின்னியம் கறங்க வாடுமகள்' (குறிஞ்சிப். 193) ; ' அரிப்பறை யனுங்க வார்க்கும் மேகலை', 'அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே' (சீவக.2082, 2688)

6. மென்பறை - மெல்லிதாகப் பறத்தலையுடைய குஞ்சு ; 'வெண்டலைக் குருகின் மென்பறை விளிக்குரல்' (ஐங்குறு.86)

7. கோசர் - ஒருவகை வீரர் ; பதிற். 12 : 18.

8. கள்ளின் தெளிவை உண்டு.

10. உள் - ஊக்கம்.13. வாட்டாறு - ஓரூர்.

15. கொழுந்தடிய சூடு - கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சி.

19. கூடு - நெல் முதலிய தானியங்கள் வைத்துள்ள சேர்.

24. உவப்ப அழித்து ஈத்தோன் - மகிழும்படி மீட்டுங் கொடுத்தோன் ;'அழித்துப் பிறந்தனெ னாகி' (புறநா.383 : 16)

25. கங்கு - எல்லை.27. திங்களின் - சந்திரனைப்போல.

27 - 8. புகழுக்குத் திங்களுவமை.

31. உரை செல - புகழ்பரக்க.

(396)