397 | வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும் உயர்சினைக் குடம்பைக் குரற்றோற் றினவே பொய்கையும் போதுகண் விழித்தன பைபயச் சுடருஞ் சுருங்கின் றொளியே மாடெழுந் | 5 | திரங்குரன் முரசமொடு வலம்புரி யார்ப்ப இரவுப்புறங் கண்ட காலைத் தோன்றி எஃகிரு ளகற்று மேமப் பாசறை வைகறை யரவங் கேளியர் பலகோட் செய்தார் மார்ப வெழுமதி துயிலெனத் | 10 | தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி நெடுங்கடைத் தோன்றி யேனே யதுநயந் துள்ளி வந்த பரிசில னிவனென நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு மணிக்கல னிறைந்த மணநாறு தேறல் | 15 | பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு மாரி யன்ன வண்மையிற் சொரிந்து வேனி லன்னவென் வெப்பு நீங்க அருங்கல நல்கி யோனே யென்றும் செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை | 20 | அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த தீயொடு விளங்கு நாடன் வாய்வாள் வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன் எறிதிரைப் பெருங்கட லிறுதிக்கட் செலினும் தெறுகதிர்க் கனலி தென்றிசைத் தோன்றினும் | 25 | என்னென் றஞ்சலம் யாமே வென்வேல் அருஞ்சமங் கடக்கு மாற்றலவன் திருந்துகழ னோன்றாட் டண்ணிழ லேமே. |
(பி - ம்.) 2 ‘குரற்றோன்றினவே' 3 ‘பைபபய' 4 ‘பாடெழநது' 5 ‘திரங்குகுரன்' 6 ‘பிறங்கணட' 11 ‘தோனறியோனே' 16 ‘வண்மைநிற்' திணை - அது; துறை - பரிசில்விடை; கடைநிலை விடையுமாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 1எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.
1திருவாரூர்க்குத் தென்மேற்கில் எருக்கங்காடெனஓரூருள்ளதென்பர்.
|