பக்கம் எண் :

595

397

வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரற்றோற் றினவே
பொய்கையும் போதுகண் விழித்தன பைபயச்
சுடருஞ் சுருங்கின் றொளியே மாடெழுந்
5திரங்குரன் முரசமொடு வலம்புரி யார்ப்ப
இரவுப்புறங் கண்ட காலைத் தோன்றி
எஃகிரு ளகற்று மேமப் பாசறை
வைகறை யரவங் கேளியர் பலகோட்
செய்தார் மார்ப வெழுமதி துயிலெனத்
10தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
நெடுங்கடைத் தோன்றி யேனே யதுநயந்
துள்ளி வந்த பரிசில னிவனென
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கல னிறைந்த மணநாறு தேறல்
15பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
மாரி யன்ன வண்மையிற் சொரிந்து
வேனி லன்னவென் வெப்பு நீங்க
அருங்கல நல்கி யோனே யென்றும்
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
20அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த
தீயொடு விளங்கு நாடன் வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
எறிதிரைப் பெருங்கட லிறுதிக்கட் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்றிசைத் தோன்றினும்
25என்னென் றஞ்சலம் யாமே வென்வேல்
அருஞ்சமங் கடக்கு மாற்றலவன்
திருந்துகழ னோன்றாட் டண்ணிழ லேமே.

(பி - ம்.) 2 ‘குரற்றோன்றினவே' 3 ‘பைபபய' 4 ‘பாடெழநது' 5 ‘திரங்குகுரன்' 6 ‘பிறங்கணட' 11 ‘தோனறியோனே' 16 ‘வண்மைநிற்'

திணை - அது; துறை - பரிசில்விடை; கடைநிலை விடையுமாம்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 1எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.


1திருவாரூர்க்குத் தென்மேற்கில் எருக்கங்காடெனஓரூருள்ளதென்பர்.