பக்கம் எண் :

597

வரிசையினிறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகி னல்லதுபகைவர்க்குப்
10புலியின மடிந்த கல்லளை போலத்
துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி
இரவுரை நெடுவா ரிப்ப வட்டித்
துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய்
15தள்ளா நிலையை யாகிய ரெமக்கென
என்வர வறீஇச்
சிறிதிற்குப் பெரிதுவந்து
விரும்பிய முகத்த னாகி யெனதரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப்
20புகைவிரிந் தன்ன பொங்குதுகி லுடீஇ
அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை
நிழல்காண் டேற னிறைய வாக்கி
யானுண வருள லன்றியுந் தானுண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
25கொக்குகிர் நிமிர லொக்க லார
வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு
புரையோன் மேனிப் பூத்தசல.........
முரைசெல வருளி யோனே................
30.........................யருவிப் பாயற் கோவே.

(பி - ம்.) 11 ‘துன்னலமபோகிய' 15 ‘நினையை' 16 ‘வறிய' 24 ‘மண்டை' 27 ‘முழாவுறழாரமொடு', ‘பிறையுறழாரமொடு'

திணை - அது; துறை - கடைநிலை.

சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார்.

(கு - ரை.) 1. புறநா.397 : 1.

2. வகைமாணல்லில்-கட்டுக்களால் மாட்சிமைப்பட்ட நல்ல வீடு.

3. வாரணம் - கோழி ; 'பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப' (மணி.7 : 116)

4. பூமுகை - மலரும் பருவமுள்ள அரும்பு.

6. புறநா.397 : 6, குறிப்புரை.