பக்கம் எண் :

598

8. வரிசை - முறை. வஞ்சன் : இப்பாட்டுடைத்தலைவன் பெயர்.

9. நகைவர்-நண்பர் ; புறநா. 373 : 35, குறிப்புரை.

11. துன்னல்போகிய - அணுகுதற்கரிய.

10 - 11. புறநா.54, மு.

9 - 11. புறநா.170 : 14 - 7.13. புறநா.399 : 25.

15. ஆகியர் - ஆகுக. என - என்று யான் கூற.

16. அறீஇ - அறிந்து.

20. 'புகைமுகந்தன்ன மாசி றூவுடை' (முருகு. 138) . உடீஇ - உடுத்தி.

25. புறநா. 395 : 36, குறிப்புரை.

27. 'அரவுற ழாரமுகக்குவ மெனவே" (புறநா. 368 : 18)

(398)

399

அடுமகண் முகந்த வளவா வெண்ணெற்
றொடிமா ணுலக்கைப் பரூஉக்குற் றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் றீங்கனி நறும்புளி
5மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற்
பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன
மெய்களைந் தினனொடு விரைஇ.......
மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்
10அழிகளிற் படுநர் களியட வைகிற்
பழஞ்சோ றயிலு முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவ னுள்ளி யவற்படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர்முக நோக்கேன்
15நெடுங்கழைத் தூண்டில் விடுமீ னொடுத்துக்
கிணைமக ளட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணு முண்டியே னழிவுகொண்
டொருசிறை யிருந்தே னென்னே யினியே
அறவ ரறவன் மறவர் மறவன்
20மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன்
இசையிற் கொண்டா னசையமு துண்கென
மீப்படர்ந் திறந்து வன்கோன் மண்ணி
வள்பரிந்து கிடந்த........மணக்க
விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை