பக்கம் எண் :

599

25அலகின் மாலை யார்ப்ப வட்டித்துக்
கடியு முணவென்னக் கடவுட்குந் தொடேன்
கடுந்தே ரள்ளற் கசாவா நோன்சுவற்
பகடே யத்தையான் வேண்டிவந் ததுவென
ஒன்றியான் பெட்டா வளவை யன்றே
30ஆன்று விட்டன னத்தை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
இழுமென விழிதரு மருவி
வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே.

(பி - ம்.) 2 ‘றொடுமாண்' 6 ‘வாளைச்சிறுகொடி' 9 ‘முழுவவி நாமபபுகலரி' 10 ‘அரிகளறபடு' 11 ‘நொகனிறயருமுடங்கு' 16 ‘பாஅற புளியஙகூழ' 27 ‘கடுநதெர்பபளளறகசாவா' 30 ‘னத்தைய' 34 ‘சிமையத்'

திணை - அது; துறை - பரிசில்விடை.

தாமான் தோன்றிக்கோனை (பி - ம். தாமானதறானறிககோனை)

ஐயூர் முடவனார்.

(கு - ரை.) 2. தொடி - பூண்.

4. மாங்கனியின்புளி ; 'வண்டளிர் மாஅத்துக், கிளிபோற் காயகிளைத்துணர் வடித்துப், புளிப்பத னமைத்த புதுக்குடம்' (அகநா. 37 : 7 - 9)

5. கோட்டுமீன் - சுறாமீன் ; 'கோட்டுமீன் குழாத்தின் மள்ளரீண்டினர்' (சீவக.2325) . குறை - குறைக்கப்பட்ட இறைச்சி.

9. மூழ்ப்ப - மூடும்படி; புறநா.336 : 5.

15. நொடுத்து - விற்று.16. பாவல் - பரவல்.

16. பொழுதுமறுத்துண்ணல் : 'பொழுதுமறுத் துண்ணுஞ் சிறு மதுகையளே' (நற். 110 : 13) . உண்ணவேண்டிய காலத்தில் உண்ணுதலைத் தவிர்ந்துண்ணும் உணவையுடையேனாய் வருந்துதலை அடைந்து ; தன் வறுமையைத் தெரிவித்தபடி.

25. புறநா.398 : 13. 27. அசாவா - தளராத.

29. ஒன்று யான்பெட்டா வளவை - ஒன்றை யான் விரும்பிக் கேட்பதற்கு முன்னே ; 'ஒன்றியான் பெட்டா வளவையின்' (பொருந.73)

31. நிரை - பசுக்கூட்டம் ; பசுக்களுக்கு விண்மீன்கள் உவமை ; 'காயமீ னெனக் கலந்து கானிரை, மேய' (சீவக.421)

33, 'இழுமென விழிதரு மருவிப், பழமுதிர் சோலை' (முருகு.316 - 7)

(399)