| திறப்பா டமைந்தவிப் புறப்பாட் டுக்கள் தெய்வ வணக்கஞ் செய்யுமி னென்பவும் அறத்தின் பகுதியை உறத்தெரிப் பனவும் பாவ வழியை நீவனன் றென்பவும் |
10 | இம்மைப் பயனொடு மறுமைப் பயனைச் செம்மையின் வகுத்துத் தெரிவிப் பனவும் அந்தண ரியல்பைத் தந்துரைப் பனவும் அரச நீதியை யுரைசெய் வனவும் வணிக ரியல்பைத் துணிவுறுப் பனவும் |
15 | வேளாண் மாக்களின் றாளாண் மையினை இயம்பு வனவும் வயம்புரி போர்க்கு முந்துறு மரசரைச் சந்துசெய் வனவும் ஒற்றுமைப் பயனைச் சொற்றிடு வனவும் வீரச் சிறப்பை யாரத் தெரிப்பவும் |
20 | இல்லற மாகிய நல்லற முரைப்பவும் துறவற மதனைத் திறவிதிற் றெரிப்பவும் மிடித்துன் பத்தை யெடுத்துரைப் பனவும் வண்மையுந் தண்மையு முண்மையுந் திண்மையும் என்னு மிவற்றைப் பன்னுகின் றனவும் |
25 | அளியையு மொளியையுந் தெளிவுறுப் பனவும் தம்மைப் புரந்தோர் தாமாய்ந் திடவே புலவர்கள் புலம்பி யலமர றெரிப்பவும் நட்பின் பயனை நன்கியம் புநவும் கல்விப் பயனைக் கட்டுரைப் பனவும் |
30 | நீர்நிலை பெருக்கென நிகழ்த்து கின்றனவும் மானந் தன்னைத் தாநன் குரைப்பவும் இளமையும் யாக்கையும் வளமையு நிலையா என்றே யிசைத்து நன்றேய்ப் பனவும் அருளுடை மையினை மருளறத் தெரிப்பவும் |
35 | தரமறிந் தொழுகென் றுரனுற விதிப்பவும் அவாவின் கேடே தவாவின் பென்பவும் இனியவை கூற னனிநல னென்பவும் உழவின் பெருமையை யழகுற வுரைப்பவும் நன்றி யறிக வென்றிசைப் பனவும் |
40 | கொடுங்கோன் மையினை விடுங்கோ ளென்பவும் தவத்தின் பெருமையைத் தவப்பகர் வனவும் மடியெனும் பிணியைக் கடிமி னென்பவும் கொலையெனும் பகையைத் தொலைமி னென்பவும் நல்லோர்ப் புணர்ந்து புல்லோர்த் தணந்து |