பக்கம் எண் :

8

20 - 24. இமயம்போலத் துளக்கமின்றி் நெடுங்காலம் நிற்பாயாகவென்றல் மரபு; ‘‘மின்னுமிழ் வைரக் கோட்டு விளங்கொளி யிமய மென்னும், பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமே னிலவி வையம், நின்னடி நிழலின் வைக நேமியஞ் செல்வ னாகி, மன்னுவாய் திருவோ டென்று வாழ்த்திநெய் யேற்றி னாரே” (சீவக. 2417) ; ‘‘துளக்க லாகா நிலையுந் தோற்றமும்.....மலைக்கே” (நன். பாயிரம்)

மு. இச்செய்யுள், ‘பால்புளிப்பினும் பகலிருளினும்....நடுக்கின்றி நிலியரோ’ என்றதனாற் செவியறிவுறூஉவும், ‘இமயம் போன்று....நடுக்கின்றி நிலியரோ’ என்றதனால் வாழ்த்தியலுமாயிற்று; இது, ‘‘பகைநிலத்தரசர்க்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் “ஓம்படைவாழ்த்தாயிற்று” என்பர்; தொல். புறத்திணை. சூ. 36, ந.

இதன் 16 - ஆம் அடியால் பாட்டுடைத்தலைவன் பெயர்க்காரணம் புலப்பட்டவாறு அறிதற்பாலது; ‘‘நாடுகண் ணகற்றிய வுதியஞ் சேரற், பாடிச் சென்ற பரிசிலர் போல, உவவினி வாழிய தோழி”, ‘‘கொடைக்கட னேன்ற கோடா நெஞ்சி, னுதியஞ் சேரல னட்டில் போல, வொலியெழுந்து” (அகநா. 65, 168) என்பவற்றால் இத்தலைவன் குணங்கள் விளங்கும்.

(2)

3

உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற
ஏம முரச மிழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற்
5றவிரா வீகைக் கவுரியர் மருக
செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ
பொன்னோடைப் புகரணிநுதற்
றுன்னருந்திறற் கமழ்கடாஅத்
தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்
10கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினு நின்சொற்பெயரல்
15பொலங்கழற்காற் புலர்சாந்தின்
விலங்ககன்ற வியன்மார்ப
ஊரில்ல வுயவரிய