| | யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் | 10. | கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச் | | செம்புறழ் புரிசைச் செம்மன் மூதூர் வம்பணி யானை வேந்தகத் துண்மையின் நல்ல வென்னாது சிதைத்தல் வல்லையா னெடுந்தகை செருவத் தானே. (37) |
திணை: வாகை. துறை: அரசவாகை; முதல் வஞ்சியுமாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை: நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் புக்கென - நஞ்சுடைத்தாகிய வெளிய பல்லினையுடைய ஐந்து படம் பொருந்திய தலையைச் சுமந்த சினம் பொருந்திய வெய்ய திறலையுடைய பாம்பு புக்கதாக; விசும்பு தீப்பிறப்பத்திருகி - வானம் தீப் பிறக்கும் பரிசு முறுகி; பசுங் கொடிப் பெருமலை விடரகத்து - பசிய கொடியினையுடைய பெரிய மலை முழையின்கண்ணே;உரும் எறிந் தாங்கு - இடியேறு எறிந்தாற்போல; புள்ளுறு புன்கண் தீர்த்த - புறவுற்ற துயரத்தைக் கெடுத்த; வெள் வேல் சினங் கெழு தானைச் செம்பியன் மருக - வெள்வேலொடு சினம்பொருந்திய படையையுடைய செம்பியன் மரபிலுள்ளாய்; கராஅம் கலித்த குண்டு கண் அகழி - கராம் செருக்கிய குழிந்த இடத்தையுடைய அகழியினையும்; இடம் கருங் குட்டத்து - இடம் கரிதாகிய ஆழத்தின்கண்; உடன் தொக்கு ஓடி - சேரத் திரண்டோடி; யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் - இடையாமத்து ஊர் காப்பாருடைய விளக்கு நிழலைக் கவரும்; கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி - கடிய மாறுபாடு பொருந்திய முதலையையுடைய நீர் மிக்க மடு வினையும்;செம்பு உறழ் புரிசை - செம்பு பொருவும் மதிலையுமுடைய; செம்மல் மூதூர் - தலைமை பொருந்திய பழைய வூரினுள்ளே; வம்பு அணி யானை வேந்து அகத் துண்மையின் - கச்சணிந்த யானையையுடைய அரசு உண்டாகலின்; நல்ல என்னாது - அவற்றை நல்லவென்று பாராது; செருவத்தான் சிதைத்தல் வல்லை - போரின்கண் அழித்தலை வல்லையா யிருந்தாய்; நெடுந் தகை - பெருந் தகாய் எ-று.
இலஞ்சியையுடைய அகழி யென மாறிக் கூட்டினும் அமையும். இப்பொருட்கும் கராம் கலித்தலை அகழிக் கடையாக்குக. கராம் - முதலையுள் ஒரு சாதி.
செம்பியன் மருக, நெடுந் தகாய், விட ரகத்து நாகம் புக்கென, உருமெறிந் தாங்கு மூதூரகத்து வேந்துண்மையின், செருவத்துச் சிதைத்தல் வல்லை யென மாறிக் கூட்டுக. |