பக்கம் எண் :

107

நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின்
10. நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த
எம்மள வெவனோ மற்றே யின்னிலைப்
பொலம்பூங் காவி னன்னாட் டோரும்
செய்வினை மருங்கி னெய்த லல்லதை
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும்
15. கடவ தன்மையிற் கையற வுடைத்தென
ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின்
நின்னா டுள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்துநின்னுடைத் தெனவே. (38)

     திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவன்,
“எம்முள்ளீர் எந் நாட்டீர்” என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.

     உரை: வரை புரையும் மழ களிற்றின் மிசை - மலையை
யொக்கும் இளங் களிற்றின் மேல்; வான் துடைக்கும் வகைய போல
-ஆகாயத்தைத் தடவும் கூறுபாட்டையுடையனபோல; விர வுருவின
கொடி நுடங்கும் - விரவின பல நிறத்தையுடையனவாகிய கொடிகள்
அசைந்து தோன்றும்; வியன் தானை விறல் வேந்தே - பரந்த
படையையுடைய விறல் வேந்தே; நீ உடன்று நோக்கும் வாய் எரி
தவழ - நீ முனிந்து பார்க்குமிடம் தீப்பரக்க; நீ நயந்து நோக்கும்
வாய் பொன் பூப்ப - நீ அருளிப் பார்க்குமிடம் பொன் பொலிய;
செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் - செஞ்ஞாயிற்றின்கண்ணே
நிலவுண்டாக வேண்டினும்; வெண்டிலங்களுள் வெயில் வேண்டினும்
- வெளிய திங்களின் கண்ணே வெயிலுண்டாக வேண்டினும்;
வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாகலின் - நீ வேண்டிய
பொருளை யுண்டாக்கும் வலியை யுடையை யாகலின்; நின் நிழல்
பிறந்து - நினது நிழற்கண்ணே பிறந்து; நின் நிழல் வளர்ந்த எம்
அளவு எவனோ - நினது நிழற் கண்ணே வளர்ந்த எமது
நினைவெல்லை சொல்ல வேண்டுமோ வேண்டா வன்றே; இன்னிலைப்
பொலம் பூங்காவின் நன்னாட்டோரும் - இனிய
நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக் காவையுடைய
நல்ல விண்ணுலகத்தவரும்; செய் வினை மருங்கின் எய்த லல்லதை -
தாம் செய்த நல்வினையாலுள்ள இன்பத்தின் பக்கத்தைப் பொருந்துவ
தல்லது; உடையோர் ஈதலும் - செல்வமுடையோர் வறியோர்க்கு
வழங்குதலும்;