| | நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் | 10. | நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த | | எம்மள வெவனோ மற்றே யின்னிலைப் பொலம்பூங் காவி னன்னாட் டோரும் செய்வினை மருங்கி னெய்த லல்லதை உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும் | 15. | கடவ தன்மையிற் கையற வுடைத்தென | | ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின் நின்னா டுள்ளுவர் பரிசிலர் ஒன்னார் தேஎத்துநின்னுடைத் தெனவே. (38) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவன், எம்முள்ளீர் எந் நாட்டீர் என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: வரை புரையும் மழ களிற்றின் மிசை - மலையை யொக்கும் இளங் களிற்றின் மேல்; வான் துடைக்கும் வகைய போல -ஆகாயத்தைத் தடவும் கூறுபாட்டையுடையனபோல; விர வுருவின கொடி நுடங்கும் - விரவின பல நிறத்தையுடையனவாகிய கொடிகள் அசைந்து தோன்றும்; வியன் தானை விறல் வேந்தே - பரந்த படையையுடைய விறல் வேந்தே; நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ - நீ முனிந்து பார்க்குமிடம் தீப்பரக்க; நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப - நீ அருளிப் பார்க்குமிடம் பொன் பொலிய; செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் - செஞ்ஞாயிற்றின்கண்ணே நிலவுண்டாக வேண்டினும்; வெண்டிலங்களுள் வெயில் வேண்டினும் - வெளிய திங்களின் கண்ணே வெயிலுண்டாக வேண்டினும்; வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாகலின் - நீ வேண்டிய பொருளை யுண்டாக்கும் வலியை யுடையை யாகலின்; நின் நிழல் பிறந்து - நினது நிழற்கண்ணே பிறந்து; நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ - நினது நிழற் கண்ணே வளர்ந்த எமது நினைவெல்லை சொல்ல வேண்டுமோ வேண்டா வன்றே; இன்னிலைப் பொலம் பூங்காவின் நன்னாட்டோரும் - இனிய நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக் காவையுடைய நல்ல விண்ணுலகத்தவரும்; செய் வினை மருங்கின் எய்த லல்லதை - தாம் செய்த நல்வினையாலுள்ள இன்பத்தின் பக்கத்தைப் பொருந்துவ தல்லது; உடையோர் ஈதலும் - செல்வமுடையோர் வறியோர்க்கு வழங்குதலும்;
|