பக்கம் எண் :

109

தறநின்று நிலையிற் றாகலி னதனால்
10. முறைமையின் புகழு மன்றே மறமிக்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கன மொழிகோ யானே யோங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்
15. டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. (39)

     திணையும் துறையும் அவை. அவனை மாறோக்கத்து
நப்பசலையார் பாடியது.

     உரை: புறவின் அல்லல் சொல்லிய - புறவினது வருத்தத்தைக்
களைய வேண்டி; கறை யடி யானை வான் மருப் பெறிந்த -
பொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற்
கடைந்து செறிக்கப்பட்ட; வெண் கடைக் கோல் நிறை துலாம்
புக்கோன் மருக - வெளிய கடையினையுடைய கோலாகிய
நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலை புக்க செம்பியனது
மரபினுள்ளா யாதலான்; ஈதல் நின் புகழும் அன்றே -
இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக் கியல்பாவதல்லது புகழு மல்லவே;
ஒன்னார் சார்தல் உட்கும் - அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள்
கிட்டுதற்கு வெருவும்; துன்னரும் கடுந்திறல் - அணுகுதற்கரிய மிக்க
வலியையுடைய; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் -
ஆகாயத்துத் தூங்கெயிலை யழித்த நின்னுடைய முன்னுள்ளோரை
நினைப்பின்; அடுதல் நின்புகழும் அன்றே - ஈண்டுள்ள பகைவரைக்
கொல்லுதல் நினது புகழும் அல்லவே; கெடு வின்று - கேடின்றி,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்
றாகலின் - மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண்
அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்ற தாதலால்; முறைமை நின்
புகழும் அன்றே - முறைமை செய்தல் நினக்குப் புகழு மல்லவே;
அதனால்-; மறம் மிக்கு எழு சமம் கடந்த - மறம் மிக்கு
எழுந்திருந்த போரை வென்ற; எழு உறழ்திணி தோள் - கணைய
மரத்தோடு மாறுபடும் தசை செறிந்த தோளினையும்; கண்ணார்
கண்ணிக் கலியமான் வளவ - கண்ணிற் கார்ந்த கண்ணியையும்
மணம் செருக்கிய குதிரையையுமுடைய வளவ; யாங்கனம் மொழிகோ
யான் - எவ்வாறு கூறுவேனோ யான்; ஓங்கிய வரை அளந் தறியா -
உயர்ந்த எல்லையளந் தறியப்படாத; பொன் படு நெடுங் கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி-