| | தறநின்று நிலையிற் றாகலி னதனால் | 10. | முறைமையின் புகழு மன்றே மறமிக் | | கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட் கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ யாங்கன மொழிகோ யானே யோங்கிய வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட் | 15. | டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி | | மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய வாடா வஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. (39) |
திணையும் துறையும் அவை. அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை: புறவின் அல்லல் சொல்லிய - புறவினது வருத்தத்தைக் களைய வேண்டி; கறை யடி யானை வான் மருப் பெறிந்த - பொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற் கடைந்து செறிக்கப்பட்ட; வெண் கடைக் கோல் நிறை துலாம் புக்கோன் மருக - வெளிய கடையினையுடைய கோலாகிய நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலை புக்க செம்பியனது மரபினுள்ளா யாதலான்; ஈதல் நின் புகழும் அன்றே - இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக் கியல்பாவதல்லது புகழு மல்லவே; ஒன்னார் சார்தல் உட்கும் - அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள் கிட்டுதற்கு வெருவும்; துன்னரும் கடுந்திறல் - அணுகுதற்கரிய மிக்க வலியையுடைய; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் - ஆகாயத்துத் தூங்கெயிலை யழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின்; அடுதல் நின்புகழும் அன்றே - ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதல் நினது புகழும் அல்லவே; கெடு வின்று - கேடின்றி, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற் றாகலின் - மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்ற தாதலால்; முறைமை நின் புகழும் அன்றே - முறைமை செய்தல் நினக்குப் புகழு மல்லவே; அதனால்-; மறம் மிக்கு எழு சமம் கடந்த - மறம் மிக்கு எழுந்திருந்த போரை வென்ற; எழு உறழ்திணி தோள் - கணைய மரத்தோடு மாறுபடும் தசை செறிந்த தோளினையும்; கண்ணார் கண்ணிக் கலியமான் வளவ - கண்ணிற் கார்ந்த கண்ணியையும் மணம் செருக்கிய குதிரையையுமுடைய வளவ; யாங்கனம் மொழிகோ யான் - எவ்வாறு கூறுவேனோ யான்; ஓங்கிய வரை அளந் தறியா - உயர்ந்த எல்லையளந் தறியப்படாத; பொன் படு நெடுங் கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி- |