உரை: ஆனா ஈகை - அமையாத வண்மையையும்; அடு போர் அண்ணல் - பகையைக் கொல்லும் பூசலையுமுடைய தலைவ; நின் யானையும் மலையின் தோன்றும் - நினது யானையும் மலை போலத் தோன்றும்; பெரும-; நின் தானையும் கட லென முழங்கும் - நின் படையும் கடல் போல முழங்கும்; கூர் நுனை வேலும் மின்னின் விளங்கும் - கூரிய நுனையையுடைய வேலும் மின்போல விட்டு விளங்கும்; உலகத்து அரசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின் - இங்ஙனம் உலகத்தின்கண் வேந்து தலை நடுங்குதற் கேதுவாகிய வலியையுடைய யாதலால்; புரை தீர்ந்தன்று - குற்றம் தீர்ந்தது; அது புதுவதோ அன்று - அது நினக்குப் பழையதாய் வருகின்றது; தண் புனல் பூசல் அல்லது - குளிர்ந்த நீரால் உள்ளதாகிய பூசலல்லது; நொந்து - வருந்தி; களைக வாழி வளவ என்று - எமது துயத்தைத் தீர்ப்பாயாக வாழி வளவ என்று சொல்லி; நின் முனை தருபூசல் கனவினும் அறியாது - நினது முந்துற்றுச் செல்லும் படையுண்டாக்கும் பூசலைக் கனாவின்கண்ணும் அறியாது; புலி புறங் காக்கும் குருளை போல - புலி பாதுகாக்கும் குட்டி போல; மெலிவில் செங்கோல் நீ புறங் காப்ப - குறைவில்லாத செவ்விய கோலால் நீ பாதுகாப்ப; பெருவிறல் யாணர்த்தாகி - பெரிய விசேடத்தையுடைய புது வருவாயை யுடைத்தாய்; அரிநர் கீழ் மடைக்கொண்ட வாளையும் - நெல்லறுப்பார் கடை மடைக்கண் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும்; உழவர் படை மிளிர்ந்திட்டயாமையும் - உழுவார் படை வாளால் மறிக்கப்பட்ட ஆமையும்; அறைநர் கரும்பிற் கொண்ட தேனும் - கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப்பட்ட தேனும்; பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் - பெரிய துறைக்கண் நீரை முகந்து கொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரு மென இவற்றை; வன் புலக்கேளிர்க்கு வருவிருந் தயரும் - வன்புலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும்; மென் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந - மென்புலத் தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; மலையின் இழிந்து மாக் கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல் யாறு போல - மலையினின் றிழிந்து பெரிய கடலை நோக்கி நிலவெல்லையி னின்றிழியும் பல யாறுகளை யொப்ப; புலவரெல்லாம் நின் னோக்கினர் - புலவர் யாவரும் நின்னை நோக்கினர்; நீயே - நீதான் அவரக்குப் பரிசில் கொடுத்தற் பொருட்டு; மருந்தில் கணிச்சி - பரிகாரமில்லாத கணிச்சி யென்னும் படைக் கலத்தை; வருந்த - உயிர் வருந்த; வட்டித்து - சுழற்றி; கூற்று வெகுண் டன்ன - கூற்றம் சினந்தாய் போலும்; முன்பொடு - வலியுடனே; மாற்று இரு
|