பக்கம் எண் :

116

     உரை: ஆனா ஈகை - அமையாத வண்மையையும்; அடு போர்
அண்ணல் - பகையைக் கொல்லும் பூசலையுமுடைய தலைவ; நின்
யானையும் மலையின் தோன்றும் - நினது யானையும் மலை போலத்
தோன்றும்; பெரும-; நின் தானையும் கட லென முழங்கும் - நின்
படையும் கடல் போல முழங்கும்; கூர் நுனை வேலும் மின்னின்
விளங்கும் - கூரிய நுனையையுடைய வேலும் மின்போல விட்டு
விளங்கும்; உலகத்து அரசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின் -
இங்ஙனம் உலகத்தின்கண் வேந்து தலை நடுங்குதற் கேதுவாகிய
வலியையுடைய யாதலால்; புரை தீர்ந்தன்று - குற்றம் தீர்ந்தது; அது
புதுவதோ அன்று - அது நினக்குப் பழையதாய் வருகின்றது; தண்
புனல் பூசல் அல்லது - குளிர்ந்த நீரால் உள்ளதாகிய பூசலல்லது;
நொந்து - வருந்தி; களைக வாழி வளவ என்று - எமது துயத்தைத்
தீர்ப்பாயாக வாழி வளவ என்று சொல்லி; நின் முனை தருபூசல்
கனவினும் அறியாது - நினது முந்துற்றுச் செல்லும் படையுண்டாக்கும்
பூசலைக் கனாவின்கண்ணும் அறியாது; புலி புறங் காக்கும் குருளை
போல - புலி பாதுகாக்கும் குட்டி போல; மெலிவில் செங்கோல் நீ
புறங் காப்ப - குறைவில்லாத செவ்விய கோலால் நீ பாதுகாப்ப;
பெருவிறல் யாணர்த்தாகி - பெரிய விசேடத்தையுடைய புது
வருவாயை யுடைத்தாய்; அரிநர் கீழ் மடைக்கொண்ட வாளையும் -
நெல்லறுப்பார் கடை மடைக்கண் பிடித்துக் கொள்ளப்பட்ட
வாளையும்; உழவர் படை மிளிர்ந்திட்டயாமையும் - உழுவார் படை
வாளால் மறிக்கப்பட்ட ஆமையும்; அறைநர் கரும்பிற் கொண்ட
தேனும் - கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப்பட்ட தேனும்;
பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் - பெரிய துறைக்கண்
நீரை முகந்து கொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரு மென
இவற்றை; வன் புலக்கேளிர்க்கு வருவிருந் தயரும் -
வன்புலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக்
கொடுக்கும்; மென் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந - மென்புலத்
தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; மலையின் இழிந்து மாக்
கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல் யாறு போல - மலையினின்
றிழிந்து பெரிய கடலை நோக்கி நிலவெல்லையி னின்றிழியும் பல
யாறுகளை யொப்ப; புலவரெல்லாம் நின் னோக்கினர் - புலவர்
யாவரும் நின்னை நோக்கினர்; நீயே - நீதான் அவரக்குப் பரிசில்
கொடுத்தற் பொருட்டு; மருந்தில் கணிச்சி - பரிகாரமில்லாத கணிச்சி
யென்னும் படைக் கலத்தை; வருந்த - உயிர் வருந்த; வட்டித்து -
சுழற்றி; கூற்று வெகுண் டன்ன - கூற்றம் சினந்தாய் போலும்;
முன்பொடு - வலியுடனே; மாற்று இரு