பக்கம் எண் :

119

நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
20காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவிரி

எக்க ரிட்ட மணலினும் பலவே. (43)

     திணையும் துறையும் அவை. சோழன் நலங்கிள்ளி தம்பி
மாவளத்தானும் தாமற்பல்கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கை
கரப்பவெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானைச் சோழன் மகன்
அல்லையென, நாணியிருந்தானைத் தாமற்பல் கண்ணனார் பாடியது.

     உரை: நில மிசை வாழ்நர் அலமரல் தீர - நிலத்தின்மேல்
உயிர் வாழ்வார்க்கு வெம்மையான் உளதாகிய சுழற்சி நீங்க; தெறு
கதிர்க் கனலி வெம்மை தாங்கி - சுடுகின்ற கதிரையுடைய
ஞாயிற்றினது வெப்பத்தைத் தாம் பொறுத்து; கால் உணவாக -
காற்றை யுணவாகக் கொண்டு; சுடரொடு கொட்கும் - அச்சுடருடனே
சூழ வரும்; அவிர் சடை முனிவரும் மருள - விளங்கிய
சடையையுடைய அருந் தவரும் வியப்பால் மயங்க; கொடுஞ் சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறு குறித் தொரீஇ - வளைந்த சிறகினையும்
கூரிய உகிரினையுமுடைய பருந்தினது எறிதலைக் கருதி அதனைத்
தப்பி; தன் னகம் புக்க - தன்னிடத்தை யடைந்த; குறு நடைப்
புறவின் தபுதி யஞ்சி - குறிய நடையையுடைய புறாவினது அழிவிற்
கஞ்சி; சீரை புக்க - தன் னழிவிற் கஞ்சாது துலாத்தலையுட் புக்க;
வரையா ஈகை உரவோன் மருக - வரையாத வண்மையையுடைய
வலியோனது மரபினுள்ளாய்; நேரார் கடந்த முரண் மிகு திருவின் -
பகைவரை வென்ற மாறுபாட்டான் மிக்க செல்வத்தையுடைய, தேர்
வண் கிள்ளி தம்பி - தேர் வண் கிள்ளிக்குத் தம்பி; வார் கோல்
கொடுமா மறவர் பெரும - நீண்ட அம்பினையும் வளைந்த
வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ; கடு மான் கை வண்
தோன்றல் - விரைந்த குதிரையையுடைய கைவள்ளிய தோன்றால்;
ஐயம் உடையேன் - நினது பிறப்பின்கண் ஐயப்பாடுடையேன்; ஆர்
புனை தெரியல் - ஆத்தியாற் செய்யப்பட்ட தாரையுடைய; நின்
முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யார் - நினக்கு
முன்னுள்ளார் யாவரும் பார்ப்பார் வெறுக்கத் தகுவன செய்யார்;
மற்று இது நினக்கு நீர்த்தோ என - மற்று இவ்வெறுக்கத்தக்க
செய்கை நினக்கு நீர்மையை யுடைத்தோ என்று; வெறுப்பக் கூறி - நீ
வெறுக்கச் சொல்லி; நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்